Tuesday, October 5, 2021

இறைசிந்தனை உள்ளுணர்வினிலே!

Noor Saffiya


·

💞இறைசிந்தனை

உள்ளுணர்வினிலே!

ஊடுருவிய என் ஹபீபே!

உணர்ந்தேன் ரசூலே!

உட்கார்ந்தால் தவமானது!

நின்றேன் ;

அலிஃபானது!

நடந்தேன் ;

இஸ்மானது!

இசைந்தேன் ;

திக்ரானது!

இணைத்தேன் ;

சிராத் பாலமானது!

மீட்டினேன் ;

வியக்கும் கவியானது!

முளைத்தேன் ;

பாவ மீட்சியானது!

விழித்தேன் ;

வழி துணையானது!

வரைந்தேன் ;

இறை அச்சாரமானது!

விரைந்தேன் ;

வரை படமானது!

வகுத்தேன் ;

பகுத்தறிவானது!

வியந்தேன் ;

என்னை அறிந்ததையே!

வந்தேன் ; வாசல் திறந்தது!

நினைத்தேன் ; நீதனானேன்!

நிமிர்ந்தேன்; 🌙 நேசமானேன்!

மறந்தேன் ;

அகமியமானேன்!

மகிழ்ந்தேன் ;

மேன்மையானேன்!

தேம்பினேன் ; பாவம்

தேய் பிறையானது!

தாங்கினேன் ; கலிமா

தூணானது!

திழைத்தேன் ; சலவாத் க்ரீடமானது!

தூறலானேன் ; துன்பம்

சிதறி விலகியது!

சாற்றினேன் ;

சாந்தமானேன்!

தூற்றினேன் ; 🌹

தூதர் வாசமானது!

பற்றினேன் ;

பாசநபி பண்பானது!

கற்றேன் ; பற்பல

படிப்பினையானது!

கசந்தேன் ; தீய சக்தி

விலக்கானது!

குலைந்தேன் ; நல்வரவு

நிலவானது!

பிசைந்தேன் ; வஹியின்

நுழை வாயிலானது!

அசைந்தேன் ; அஹ்மதின்

அச்சாரமானது!

சென்றேன் ; பாதை நேர்வழியானது!

சொன்னேன் ; சோஃபன

மலக்கின் ஒசையானது!

சிரித்தேன் ; சர்தாரின்

புன்னகையானது!

சந்தித்தேன் ; அனைத்தும்

சமர்ப்பணமானது!

அர்ப்பணம் அர்ப்பணம்

அர்ப்பணமே!

அகமும் புறமும் அங்கே

அர்ச்சனை பண்ணுதே!

சமர்ப்பணம் சமர்ப்பணம்

சமர்ப்பணமே!

சாந்தம் தழுவியே சகலமும்

சிரம் பணியுதே!

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸுக்ரன்லில்லாஹ்!

அர்ப்பணமுள்ளவர் ஓர்

அதிர்ஷ்டசாலியே!

ஆன்மீக வாழ்வினின்

அத்தியாயமே!

      அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                     آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                     يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                    يارحمة اللعالمين !🌹

                 🤲🤲🤲🤲🤲

                   💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: