Friday, October 1, 2021

இறைசிந்தனை 🌹 பசுமை 🌹

 நூர்ஷஃபியாகாதிரியா



💞 இறைசிந்தனை

          🌹 பசுமை 🌹

பச்சை பசேலென்று

பாரின் அமைப்பானேன்!

பாச நபியின் குணம்

பார்த்தேன் படைப்பானேன்!

பாரினில் குளிர் சோலை

பசுமை எனும் படைத்தவனில் பசுமரத்தாணியானேன்!

பேசும் நாவிற்கென தந்த

பேரின்ப சலவாத் ஆனேன்!

படைத்தோன் வஹியால்

பெற்ற மறையானேன்!

படைப்பின் புனிதமானேன்!

புரியும் சக்தியும் உந்தன்

பார்வையோடு லயித்தேன்!

பசுமையில் கூட எந்தலர்

படிப்பினையானேன்!

பசுமை நிறைந்த உள்ளத்தின் சோலையானேன்!

பற்பல வரங்களானேன்!

பாவங்களின் விலக்கானேன்!

பரிதாபமோ, போக்கிடம் தேடியே!

பரிதவித்து விலகி ஒடியதே!

பணிவும்,பண்பும் பிறந்திட்டதே!

பிறப்பின் உச்ச புனிதமாக்க!

பேரின்ப அலை வீசியதுமே! பரந்து விரிந்து சிறகடித்து!

ப்ரிய நபி நோக்கி சென்றிட!

புகழாரம் சூட்டிய நாவினாலே!

அங்கசுத்தியில் ஆக்ரமித்து அற்புதமானதே!

அகத்தினில் செய்யும் ஓர்

அழகிய தவாபாக்கியதே!

அல்லாஹ்வில் அமானிதமாய் அடிமையென்றானதே!

அடிபணியும் சிரமானதே!

அலங்கார வாசல் முன்னே!

அகம்,புறமும் அழுவுதே!

அனைத்து அங்கமுமே!

அர்ப்பணமாய் ஆகியதே!

கருப்புத்திரையினிலே!

கை,முகம் பதித்திடவே!

கண்,கல்பும் கெஞ்சிடுதே!

கண்ணீர் தாரைதாரையாய்!

கண்மணி ஷஃபாஅத்திற்கே!

கணக்கு தீர்த்து எம்மை!

கரைசேர்த்து கரம்பற்றிடவே!

திரையும் கல்பிலகற்றவே!

திறந்தது கஃபா வாசலுமே!

தாஹா கஸ்தூரி வாசத்திலே!

தஞ்சம் புகுந்தது அங்கமுமே!

அடைக்கலம் ஆனதுமே!

அருள் மனம் கமழ்ந்ததே!

அவன் அர்ஷின்  பீடத்திலிருந்தே!

அள்ளி எடுக்க கணக்கின்றியே!

அவன் ரசித்து மகிழவே!

அனைத்து முன்பின் பாவமே!

அலறி அடித்து விரண்டதே!

அச்சம் உச்சத்தின் மிச்சமானதே!

இறைக்கும் ரசூலுக்கும்!

இயக்கமாய் தொங்கோட்டம்!

இறுதியில்  தாகம் தீர்க்கவே!

இனிய ஜம்ஜம்மினாலே!

இதயம் ️ தூய திக்ரானதே!

எல்லா நிகழ்வும் இறைவா!

எந்தன் அகமிய வாழ்வு!

ஏந்தலர் வாழ்வுடனே!

எண்ணிலடங்கா நேர்வழிக்கே!

நல்லடியார் நட்புடனே!

நாவை பேணுபவருடனே!

நாயனில் நனைபவருடனே!

நாதர் நேசமவருடனே!

வீடும்,சுற்றமும் நேசமாய்!

வீண் வம்பரில்லா!

வேசம்,ஃபஷாது,ஃபித்னா!

வஞ்சகம்,வஞ்சனை இல்லா!

நேசர் புகழ் பாடும்  இடமாய்!

நாதர் நாமம் முழங்கிடும்!

நபி வாசம் கமழ்ந்திடும்!

நீதர் நிலைக்கும் புகழிடம்!

நாயனே தந்திருக்கின்றாய்!

நீதனே நிலைக்க செய்வாய்!

நிறைவாய் தந்தருள்வாய்;

நிம்மதியில் அமல் செய்தே!

நீடூழி ஆரோக்ய அங்கமாய்!

.நிமலோனில் சிரம் பணிந்தே!

குறை,குற்றமிலாமலே!

குறைவற்ற நற்செல்வம்!

கோமான் நிறைவாய் தந்தே!

கல்புகுளிர,அருட்,பொருட்,

மக்கட், மனை செல்வமும்!

அள்ளி அள்ளி தந்து மகிழ்ந்து!

அவனே, கஜானாவின் அருள்!

அவனின் ரஹ்மத்  சொரிய!

அனுபவித்து,வாழ,ஆள!

எல்லாம் வல்லிறைவன்

அருட்கொடையாய்!

அருட்கிருபை செய்தே!

அகமிய தீன்சுவை தாகமும்!

அள்ளி அள்ளி தந்து மகிழ்வான்; மகிழ வைப்பான்!

மகிழ வைத்து கொண்டே

மஹ்ஷர்வரை அமானிதமாய் காப்பான்!

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸுக்ரன்லில்லாஹ்!

     அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                     آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                     يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                    يارحمة اللعالمين !🌹

                 🤲🤲🤲🤲🤲

                   💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியாகாதிரியா

No comments: