Monday, November 24, 2014

இலையுதிர் காலம் வந்தபோது உதிர்வதற்கு இலைகள் இல்லை


வசந்த காலம் வந்தபோது உறவுகள் பூத்துக் குலுங்கினார்
இல்லாத காலம் வந்தபோது உறவுகள் உதிர்ந்துப் போயினர்
எதிர்கலாத்தில் உறவுகள் இல்லாத நிலையில் போகுமோ
காலங்கள் மாறும் நன்மைகள் நிகழுமென நினைத்திருந்தேன்
வசந்த காலமும் வருமென காத்திருந்தேன்
வசந்த காலமும் வறண்ட காற்றை வீசியது
காலத்தின் மாற்ற நிலை நிகழ்ந்ததால்
இலையுதிர் காலம் வந்தபோது உதிர்வதற்கு
இலைகள் இல்லாத நிலையில் என்னிலையானது
-முகம்மது அலி 
Mohamed Ali


"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு."- ஔவையார்

No comments: