Sunday, November 16, 2014

உலக வாழ்க்கை....!

வாழ்க்கைப் பெருங்கடலை
நீந்திக் கடக்க முயற்சிக்கும்
மீன் குஞ்சுகளே மனிதர்கள்

வருத்தமே வாழ்க்கையென
வருந்துவோரே அதிகமிருந்தும்
வாழ்க்கையை வாழ்வோரும் அதிகம் அதிகம்

நாடியது நடக்க
வேண்டுமென ஓடோடி உழைத்து ஓடாய் தேய்ந்தொரும் இங்குண்டு

பணமே பிரதானமென
பண்பை தொலைத்து
பராபரனை மறந்து வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடியோரும் இங்குண்டு

அசுரவேக முன்னேற்றங்களும்
பிரம்மிக்கவைக்கும் வளர்ச்சியும் சர்வ சாதரணமாகவே நடைமுறையில் இருக்கும்.

காலங்கள் மாறும்
கவலைகள் தீரும்
வசந்த காலமும் வரும் இருந்தும் நிலையில்லாதது வாழ்க்கை.
***************************************************

No comments: