Monday, November 24, 2014

தெற்கு சூடான் பயணக் குறிப்பு 5.

60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த தருவாயில் இருக்கும் நாட்டின் ஒரு சிறிய ஊர் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக பார்க்க முடிந்தது.

போரில் ஊனமுற்றவர்கள், கண்ணி வெடிகளால் பாதிக்கப் பட்ட அப்பாவி பொதுமக்கள் அப்பப்பா அவ்வளவும் கொடுரங்கள்.
போர் என்பதே அழிவின் அரங்கேற்றங்கள் தானே?

போரில்லா பெருவாழ்வை எல்லாம் வல்ல இறையோன் உலக நாடுகளுக்கு அருளவேண்டும்.

எங்களது அடுத்த கட்டப் பயணம் மெரிடி எனும் ஊரை அடைவது.
புறப்படும் முன்னர் நாங்கள் இரவு தங்கிய நார்வேஜியன் நாட்டு தொண்டு நிறுவனத்தாரிடம் வழி விபரங்களை விசாரித்து தெரிந்து கொண்டோம்.
அதாவது போரின்போது வைக்கப் பட்டிருந்த கண்ணி வெடிகள் ஐ நா சபையின் உதவி கொண்டு முழுவதுமாக நீக்கப் பட்டுவிட்டது. செம்மண் சாலையும் தரம் செய்யப்பட்டு பயணத்திற்கு உகந்ததாக இருக்கிறது.
வழியில் வேறு ஊர்கள் எதுவுமில்லை முழுவதும் காட்டு வனாந்திரமே.

மேலும் மெரிடியில் தங்குவதற்கு அவர்களது கேம்பையே உபயோகித்துக் கொள்ளாவும் மனமுவந்து அனுமதி தந்தனர். உடனேயே வானொலி அழைப்பு வழியாக எங்கள் வருககைக்கான முன்னறிவிப்பு தகவலும் இரவு உணவு தயாரிக்க உத்தரவும் கொடுத்து விட்டனர்.

பல வருடங்களாக வெளிநாடினரையே கண்டிராதவர்கள் காணாததை கண்டதுபோல் உபசரித்தனர்.
(தொடரும் )
எழுதியவர் ராஜா வாவுபிள்ளை

ராஜா வாவுபிள்ளை

No comments: