Sunday, November 30, 2014

உலகம் உன் கையிலடா....!(தொடர் - 2)-ராஜா வாவுபிள்ளை


உயிரும் உணர்வும் உண்மையடா!
*** பிறப்பும் இறப்பும் இயற்கையடா!
வாழ்வின் நெறியை வகுத்துக்கொண்டால்
*** நிறைவுகள் நிறைந்த உலகமடா!!

நல்லோரும் தீய்யோரும் உண்டுமடா!
*** நன்மையும் தீமையும் நிறைந்ததடா!
நல்வழிப் பாதையை அறிந்துகொண்டால்
*** நட்புகள் நாடிவரும் உலகமடா!!

வளர்ச்சியும் வளங்களும் வளருமடா!
*** வானளாவ புகழும் சேருமடா!
நேர்மையாய் தொழிலை நடத்திவந்தால்
*** நலமாய் வாழவைக்கும் உலகமடா!!

இயற்கையும் செயற்கையும் இணைந்ததடா!
*** வல்லமையும் இயலாமையும் இருக்குதடா!
பகுத்தறிந்து வாழப் பழகிக்கொண்டால்
*** கல்லாமல் பாகம்படும் உலகமடா!!

உயர்வும் தாழ்வும் நிலைக்காதடா!
*** சீரான வாழ்க்கை வேண்டுமடா!
நேரானபதை வழிநடந்து சென்றால்
*** இறைவனடி சேர்க்கும் உலகமடா!!

No comments: