Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, September 3, 2014

கடித இலக்கியம்

நவீன இலக்கியத்தில்...
கடித இலக்கியம் என்றோர்
நட்சத்திர சங்கதி ஒன்று உண்டு!
அது வளமாக இருந்தக் காலம் போய்
இப்போது மங்கி தேய்ந்து வருகிறது.
டெலிபோனின் உபயோகப் பெருக்கமும்
ஈமெயில் பரவலும்
தளைத்து கிளைத்துவிட்ட இன்றையப் பொழுதில்
கடித இலக்கியம் நசிந்துவிட்டதில் வியப்பில்லை.
ஒரு காலக் கட்டத்தில்
ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு
அமர்க்களப்பட்ட
காதல் கடிதங்கள் கூட
இப்போதெல்லாம் அவ்வளவாக
உபயோகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
உலக மயமாக்கப்பட்ட காலக்கட்டமிது!
எல்லாமே துரிதம்...
எல்லாமே நேரடி ஆக்,ஷன்!

*

Friday, April 4, 2014

சென்னை பெருநகர சாலையொன்றில்...

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நகர பேருந்து நகரா பேருந்தாய் நின்ற நேரத்தில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அவளை பார்த்தேன். நான்தான் பார்த்தேனே தவிர அவள் என்னை பார்க்கவில்லை. குனிந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். ஒருவேளை புத்தகம் படிக்கலாம். அல்லது போனில் யாருக்காவது SMS அனுப்பலாம். அல்லது கேம் விளையாடலாம். அல்லது முகநூலில் யாருடனாவது சாட்டில் மொக்கை போடலாம். இதில் எதை செய்கிறாள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. அப்போது என் நண்பனும் பார்த்தான், அவளையல்ல... நான் பார்த்ததை.
-இப்படி எழுதிக்கொண்டிருந்த என்னை விநோதமாய் பார்த்தாள் அவள்.

என்ன இது என்றாள்.

Sunday, March 9, 2014

சில நேரம் பார்க்கிறேன் நான் அந்தப் பார்வைதான் இந்தக் கவிதை ஆகிறது

வைகறை வெளிச்சமிடும்போது
மெழுகுவர்த்தியை அணைத்துவிடு,
இதோ உன் கண்களில்
வைகறை இப்போது..!!

-மெளலானா ரூமி

உன் ஒளியில் கற்கிறேன்
காதலிக்கும் கலை

உன் அழகில் கற்கிறேன்
கவிதைகள் எழுத

யாருமே உன்னைப் பார்க்காத
என் நெஞ்சினுள் ஆடுகிறாய் நீ

சில நேரம் பார்க்கிறேன் நான்
அந்தப் பார்வைதான்
இந்தக் கவிதை ஆகிறது
-மெளலானா ரூமி

பொறுமையின் செவிகளால் கேள்
கருணையின் கண்களால் பார்
காதலின் மொழியால் பேசு...!!

Monday, November 4, 2013

முகிலே முகிலே

பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா