Tuesday, September 22, 2020

யா அல்லாஹ்.! எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்


யா அல்லாஹ்.!

எல்லோரும் 

எல்லாமும்

பெற வேண்டும்

எல்லா புகழும் 

உனக்கே

உரித்தாக்க 

வேண்டும்

அமைதி 

எங்கும் நிலவ 

வேண்டும்

எங்கள் 

பாவங்களை

நீ மன்னிக்க

வேண்டும்

கேலியும் 

கிண்டலும் 

புறம் பேசுதலும்

எங்களை 

விட்டு விலக 

வேண்டும்

ஐந்து 

கடமையை

பேணுவோராய்

நாங்கள் 

வாழ வேண்டும்

முப்பொழும் 

உன் நினைவில்

எங்கள் 

வாழ்க்கை 

இருக்க

வேண்டும்

நூர் 

முஹம்மதின்

அழகை  

நாங்கள் காண 

வேண்டும்

அந்த 

ஆனந்தம் 

தழைத்து

நிலைக்க

வேண்டும்

மறுமை 

வெற்றியாளர்களாய்

உன்னை 

சந்திக்க 

வேண்டும்

உன்னை 

சந்தித்த 

மகிழ்ச்சி 

விளிம்பில்

நாங்கள் 

மிளிர 

வேண்டும்

இம்மையிலும் 

மறுமையிலும்

உன் 

அடியார்களாய்

நாங்கள் இருக்க

வேண்டும்

உன் புகழை 

நாங்கள் போற்ற 

வேண்டும்..

நீடூர் நெய்வாசல்

   ‌ அ பாபு..




Abdul Hadi


எங்கள்

முஹம்மத் (ஸல்)

அழகிய

முன் மாதிரி.!

உயர் குலமாக

தங்களை

தாங்களே

கறுதிய 

குரைக்ஷியர்களின்..

சமுதாயத்தில் 

பிறந்து

ஏகத்துவத்தை 

கொண்டு

எத்தி வைத்தார்

எடுத்து வைத்தார்

சமத்துவ 

சமுதாயமாக 

மாற்றினார்..

மனிதன் 

மனிதனாக 

வாழ்வதற்கு..

மறபுகளோடு 

மாண்புகளையும் 

போதித்தார்..

ஆட்சியாளராய் 

இருந்தும்

ஆட்சி கட்டிலில்

அமராது

நற்பணிகளை 

செய்த 

ஏக இறையோனின் 

தூதர்..

பொறுமையில்  

பூத்த 

புன்னகையாய்

ஓர் இறைவனின் 

ஒப்பற்ற 

மறையை 

ஒப்பித்தார்

சிலைகளை 

கடவுகளாக 

மூதாதையர்களை

தெய்வங்களாக 

வணங்கிவந்த 

மக்களுக்கு

ஏக இறையோனின் 

இஸ்லாத்தை 

எடுத்துரைத்தார்

வாழ்வளித்த 

வல்ல 

இறையோனின்

அடியாராய் 

வாழ்ந்தார் 

வாழவும் 

சொன்னார்

எங்கள்

முஹம்மத் (ஸல்)

அழகிய

முன்மாதிரி.!


நீடூர் நெய்வாசல்

     அ பாபு..

-----------------

மண்ணறைய

நினைச்சாலே

இவ்வுலக

வாழ்க்கை

ஒன்னுமில்ல

மறுமைய

நினைச்சாலே

மண்ணறை

வாழ்க்கை

ஒன்னுமில்ல

இணை வைச்சி

வாழ்ந்தால்

சொர்க்கத்துல

இடமுமில்ல

அற்ப சொற்ப

வாழ்க்கையிலே

ஆணவம் மட்டும்

குறையவில்ல

நன்றி கெட்ட

மனுசனும்

இன்னமும்

உணரவில்ல

ஆறடி

மண்ணிலே

ஆடம்பரம்

ஏதுமில்ல

ஆட்டம் ‌போட்ட

வாழ்க்கையும்

எப்போதும்

நிலைக்கவில்ல

ஓர் இறை

வார்த்தைய

செவி கொடுத்து

கேக்கவில்ல

நபி வழி

நடக்காம

வழி கெடுக்கும்

சைத்தானுடம்

கை கோர்த்து

கொண்டு சேர்க்கும்

நரக வழி

பயனளிக்கவில்ல

புத்தி கெட்டு

போன காலத்த

மீட்டெடுக்க

முடியவில்ல

திருந்த

முடியவில்ல

திருத்த

முடியவில்ல

ஏகனிடம்

கையேந்துவதை

தவிர வேறு

வழியும் 

தெரிவில்ல

உயிர்

போராட்டம்

தொடர

வாய்ப்பில்ல

உணர்ந்து

வாழ்ந்தால்

நாமும்

சொர்க்கத்தில்ல


நீடூர் நெய்வாசல்

    அ பாபு..



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் என்னுடையது சொந்த பதிவேற்றம்தான்  வலைப்பதிவு இடுகை பக்கம் போடலாம் நேரம் கிடைப்பதில்லை  பணி என்பதால் நேரம் கிடைக்கும்போது அவசரமாக பகிர்ந்து கொண்டுவிடுவேன்  இன்ஷாஅல்லாஹ் வருங்காலத்தில் முயற்சி செய்கிறேன் வலைப்பதிவு பக்கம் போய் படிக்க நம் சக மனிதர்களுக்கு ஆர்வமோ தேடலோ நேரமோ இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு எளிய வழிமுறைகள் நாமும் போக வேண்டிதாயிற்று நன்றி 

வஸ்ஸலாம்.

நீடூர் நெய்வாசல் ‌

       அ பாபு..



No comments: