Tuesday, September 15, 2020

"நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீத்

பாமணக்கும் நல்ல பதியாம் மயூரநகர்

தாமதிக்க   வாழும் தயாநிதியே  - நாமதிக்கும்



நண்பர் சயீத்தென்னும்   நாவலா தீன் நெறிப்

பண்பாளா நன்மை செய்யும்  பாங்களா - எண்ணலிலும்

நல்லதையே நாவுடையோய் - வல்ல

அறிவுடையோய் அன்புடையோய் யார்க்கும் உதவும்

நெறியுடையோய்  நீள்புகழோய் நெஞ்சம் - அறிந்தவர்கள் 

என்றும் மறவா இயல்புடையோய்  இன் தமிழால்

நன்று இந்த நாடறிந்த நற்கவிஜன்  - பொன்றாத

சீறாய்ப் புகழ் பாடும் சீர்சால் ஷரீபுகவி 

மாறாத அன்புடனே வாழ்திமிக நேரார்ந்த

ஆதரவுடனே அரிய சலாமுசைத்து

தூதாதாக விட்டேன் இத்  தூக்கு  உன்பால் -கோதரவே

அங்கு நான் வந்துற்று அழகுறவே சீறாவின்

பொங்கு தமிழ் பாட்டின் பொருள்கூ-உங்களரும்

நேசத்தைப் பாராமல் நித்திரையும் தான் துறந்து

சீரத்தைக் கேட்டச்  சிறப்புடனே -சாரமுன்

சொல்லாலே  வாழ்திச் சுகப்படும் தன்மையிலே

நல்லபடி யாய்ப் பொருளும் நல்கியே -எல்லையிலா

அன்பிலே எம்மை அமுக்கித் திணற வைத்த

நன்பரே  உங்களுக்கு நல்லிறைவன் -என்றேன்றும்

ஏற்ற நறும் இன்பமே ஈக இடர்களைந்து

போற்றுமுயர்  செல்வமெல்லாம்  போந்தளிக்க சாற்றினேன்

வண்ணக் கவிமடல் வாழ்க வளம் பெருக்கிக்

புண்ணியமும் சேரப் பொலிந்து !

( 1978 இல் பாடியது )

கவி மாலை --கலைமாமணி   வி கா.மு. செரீப்  நீடூர் அல்ஹாஜ், வழக்கறிஞர், ஏ.எம்.சயீத் அண்ணன் பற்றிப் பாடியது .

(ஏ.எம்.சயீத் அண்ணன் பற்றிப்கவிஞ்ர்கள் பல சந்தர்பங்களில் கவிதை பாடிருகிறார்கள். அந்த கவிதைகளில் சில ....  )

நன்றி : "நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீத்"

அ. மா . சாமி

No comments: