Sunday, July 2, 2017

ஈடுதான் ஆகுமா?'

Noor Mohamed

என்னை நீயும் சுமந்'தாய்'!
இன்னல் பலதும் அடைந்தாய்
வந்தேநானும் விழுந்தபோது
நொந்ததை நீயும் மறந்தாய்
சிந்தை மிகவே மகிழ்ந்தாய்
சிறுநகை நீயும் புரிந்தாய்
கூலிகள் எதவும் வேண்டாது
பாலினை எனக்கு வார்த்தாய்
நலம்பெற வேண்டும் நானென்று
நாளும் பொழுதும் தேய்ந்தாய்
உயிரில் நீயும் கலந்தாய்
உணர்வை எனக்குத் தந்தாய்

உன்னைநான்
இன்றுதான்
சும்ப்பது,
என்னுயிர்
அன்னையே
அதற்கெலாம்
ஈடுதான் ஆகுமா?


Noor Mohamed

No comments: