குத்பாப் பிரசங்கம்
தாவூத்ஷா காலத்தில் தமிழ் நாட்டில் பள்ளிவாசல்களில் குத்பாப் பிரசங்கம் அரபியில் நடந்தது. தமிழில் நடத்த வேண்டும் என்று அவர் போராடினார். தானே 54 குத்பா சொற்பொழிவுகளைத் தமிழில் எழுதி, நூலாக அச்சிட்டு வெளியிட்டார். “குத்பாப் பிரசங்கம்” என்ற அந்த நூல் பற்றிய விளம்பரம்:
“பள்ளிவாசல்களில் கூடியிருப்பவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிய போதிலும் அரபு மொழியிலேயே குத்பாவை ஓதி, அவர்களைத் தாலாட்டி மேலும் உறங்க வைத்தாலும் வைக்கலாமேயொழிய ஜும்ஆ பிரசங்கங்களைத் தாய்மொழியில் புரியக் கூடாது என்று தொண்டை கிழியக் கத்தித் திரிந்த முரடர்களின் காலம் அஸ்தமித்துப் போய்விட்டது.
