Thursday, May 17, 2018

#கல்லறையே ... கருவறையாக ...

Abu Haashima

பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது
மீண்டும் குண்டுமழை பொழிந்து
ஏராளமானவர்களை கொன்று குவித்திருக்கிறது இஸ்ரேல் !
இதற்கு முன்னரும் இப்படி பல படுகொலைகளை செய்தது .
2006 ல் நடந்த ஒரு கொலை வெறி தாக்குதலை பற்றி
#கவிமாமணி_பேராசிரியர்
#தி_மு_அப்துல்காதர் அவர்கள்
#நமது_முற்றம் இதழல் எழுதிய கவிதை !

#கல்லறையே ...
#கருவறையாக ...

அன்று -
வெட்டுப்பட்ட பிளவுகளில்
ஒட்டும் கோந்து
ஊறும் மரம் போல
கலீல் ஜிப்ரானின்
கனிந்த நாவில்
கிழிபடும்
உலகப்படத்தை
ஒன்றாய் ஒட்டும்
உயிர்ப்பசைக் கவிதைகள்
உலவிய லெபனான்
இன்று
கிழிந்து கொண்டிருக்கிறது !

தஸ்பீஹ் மணிகளைக்
கொத்தித் தின்னும்
இஸ்ராயீல் கழுகுகளின்
ஏவுகணை அலகுகளில்
அத்தஹிய்யாத் விரல்கள் !


செடார் மரக்கிளைகளில்
தொட்டில்கள்
தொங்கும் கல்லறைகள் !

காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா.

மானபங்கப்படும்
மனித நேயத்திற்கு
உத்தரீயம் கொடுகரகவும்
அமெரிக்க சகுனியிடம்
உத்தரவு கேட்கும்
கெளரவர் சபை
பஞ்ச பாண்டவர்களாய்
வளைகுடா நாடுகள் -
கிப்லாவை
டாலருக்கு மாற்றிக்கொண்டு
முஸல்லாவை விற்று
அமெரிக்க
அழகுச்சிலை வாங்கியதால்
மினாராக்கள்
யூதர்களுக்கு
சஜ்தா செய்கின்றன !

ஆப்கன் விதையெடுத்து
அமெரிக்கா பயிரிடும்
கொடி முந்திரித் தோட்டக்
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின்
முழிக்கும் விழிகள் !

அமெரிக்க - இஸ்ரேல்
காக்டெய்ல் விருந்தின்
ஐஸ்கிரீம் மகுட உச்சியில்
செர்ரிப் பழமாய்
பாய்மார்களின்
தாய்மார்க் காம்புகள் !

அலிஃப்
எழுத்துப்போல
சேராது
தனித்திருக்கும்
அரபு நாடுகளே !

ஒன்றாய் நீங்கள்
ஒன்றுக்கிருந்தால்
மூத்திரத்தில்
மூழ்கிப் போகும்
யூத அமெரிக்கக்
கள்ள உறவில் தோன்றிய
கர்ப்பக் கழிவு !

அஸாக் கோல்களால்
ஆன
சந்தூக்குகள்
அமெரிக்காவில் கிடைக்கலாம்
ஆனால்
மூமின் உடல்களை
அடக்கம் செய்ய
ஓரடி மண்கூட
உங்களிடம் இருக்காது !

உங்கள் பாலஸ்தீன
கபர்குழி ஒன்றிலிருந்து
கடிதம் ஒன்று
கண்ணிமை
உதடு திறக்கிறது !

பாலஸ்தீன விடுதலை இயக்கப்
பதினாறு வயது
பச்சிளம் பிறை நான் !
போரில் வெடித்துச் சிதறிய
விரலால்
இரத்தம் தொட்டு
எழுதுகிறேன்

வீரர்களே ..
தாயக மீட்சிக்காக
தீன் நெறி ஆட்சிக்காக
என்
கையத்துப் போனாலும்
என்
மெய்யத்துப் போனாலும்
நான்
மைய்யத்து ஆனாலும்
என்
நிய்யத்துப் போகாது !

மூமின்களே ..
ஆமீன்களுக்காக மட்டும்
உயரும் கரங்கள்
புனித
ஆயுதங்களுக்காக உயரட்டும் !

விடுதலை விதைகளே ..
நீங்கள் எப்போதாவது
களத்தில்
நிராயுதபாணியாக நின்றால்
ஆயுதம் இல்லையே என
அவதியுற வேண்டாம் !

என்
சவக்குழியைத் தோண்டுங்கள்
என் கபாலத்தைக்
கேடயமாக்குங்கள்
என்
கைகால் எலும்புகளை
ஆயுதமாக்குங்கள் !
என்
எலும்புகளுக்கு
இரண்டாம் முறையும்
போரிடும்
வாய்ப்புத் தாருங்கள்
இன விடுதலைக்காக !


No comments: