Thursday, February 2, 2012

காதல் சிறகினிலே



இருபதில் தொடங்கிய
இதிகாசக்காதல்
அருபது முடிந்தும்
அறுவடையற்று
நிறைந்த  கோபங்கள்
நிகழந்த சண்டைகள்
உதிர்ந்து உதிர்த்து
வெற்றுச்செதில்களாய்
விழுதுகளில் விளையாடி
தொடங்கிய காதல்
வேர்களில் நிறைந்தது
நிம்மதியாய்
வெளுத்த மீசைக்கு
கருமை அடிக்க
பெண்மையின் கண்களில்
என்றும் வெளுக்காத
காதல் கண் மை
காதல் தொடங்கிய
கண்கள் சுருங்கலாம்
வாய்கள் மொழிந்த
வார்த்தை மறக்கலாம்
காமம் சுகந்த
தேகம் இளைக்கலாம்
தேடிடும் கைகளுள்
பற்றிடும் உயிரென
தளர்ந்த கைகள்
இருக்கிப்பிடிக்கையில்
குழைந்த கதல்
இறுதியாய்..
இனிமையாய்..
என்றும் இளமையாய்..
Source : http://uumm.wordpress.com/

உமா

உமா. கோவை வாசி. கவிதைகள் ஒவ்வொரு அசைவையும் தாமே தேர்ந்தெடுக்க முடிகிற அழகிய வண்ணக் கனவு. அந்தக் கனவுகள் தருகிற புத்துணர்வே  ஒவ்வொரு சுவாசத்தையும் இயல்பாக்குகிறது. உமாவின் கனவுகளின் ஆல்பத்தை பகிர்ந்து கொள்ள நட்போடு வரவேற்கிறேன்...உமாவும் கவிதையும்

இயற்கையின் அடிமை

இதயங்களின் சிநேகிதி....



எதையும்..எவரையும்..
அவரவர்..குறை ..நிறைகளுடன்..
நேசிக்க விரும்புவபர்....


கவிதைகளோ...கதைகளோ...
வாழ்கையை..மனித உணர்வுகளை...
ரசித்து...ருசித்து...பார்க்கும்


அன்பால் மட்டுமே..அனைத்தையும்
சாதிக்கத்துடிக்கும்...

...உமா

1 comment: