Wednesday, September 29, 2010

யதார்த்த மயக்கம்!

யதார்த்த மயக்கம்!


படுப் பதுவோ...
போர்த் துவதோ...
கண் ணடைப்பதுவோ
அல்ல உறக்கம்,

நடந் ததுவும்...
நடப் பதுவும்...
நடக்க இருப்பதுவும்- என
நர்த்தனமாடும்
மனச்
சலனங்கள் ஓய்வதே...
உறக்கம்!

திறந்த கண்களும்...
பறந்த பார்வையும்...
உறத்த நோக்கும்
அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்...
உணர்ந்து நீக்கலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!

காண்பதும்...
கேட்பதும்...
நுகர்தலும்...
மூச் சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை,
நினைப்பதும்...
செய்வதும்...
செய்ததை உலகம்
நினைத் திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை!

உயிர் கழிதலும்...
உணர் வழிதலும்...
மெய் வீழ்தலும்...
அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்...
இல்லாம லிருத்தல்போல்...
இருப்பதே...
மரணம்!

தெரியாதவை தெரிதலும்...
புரியாதவை புரிதலும்...
விளங்காதவை விளங்கலும்...
அல்ல ஞானம்,

தெரிந்ததை தெரிவித்தலும்...
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே...
ஞானம்!


மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!

-சபீர்
Source ; http://adirainirubar.blogspot.com/2010/09/blog-post_30.html

No comments: