Thursday, September 9, 2010

இனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்



 எல்லோரும் இன்புற்று வாழ இவ்வினிய நேரத்தில் எல்லாம் வல்ல 

அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி அவர்கள் 

காட்டிச் சென்ற ஈகைப் பெருநாளில்  வேண்டுவோம்அனைத்துப் புகழும் 

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் 

நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
 



                                     அ முஹம்மது அலி ஜின்னா(“நீடூர்அலி”)

 =======================================================================

இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே!

-முஹம்மது பெளமி-

 பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் “ஈத்” என அழைக்கப்படுவது உண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது.  ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டு தோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது.  இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!
பெருநாட்களின் நோக்கம்!
யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள்.

பெருநாள் கொண்டாட்டம்!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நன்மைகள் செய்யக் கூடிய நல்வாப்பாகவே பெருநாட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இறைவனை அதிகமாக நினைவு கூர்ந்து திக்ர் செய்தல், அவனுக்கு நன்றி செலுத்தல், தான தருமங்கள் செய்தல், நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளல் மூலம் இணக்கத்தையும் சகோதரத் துவத்தையும் வலிமையாக்கிக் கொள்ளல், பகையும் குரோதமும் களைந்து உற்றார் உறவினர்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல், நோயாளிகளை நலன் விசாரித்தல், அண்டை அயலாரோடு பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ளல், பகை கொண்ட உள்ளங்களை சேர்த்து வைத்தல், பெற்றவர்களை மனம் குளிரச்செய்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதுடன் அனுமதிக்கப்பட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு இன்புற்று மகிழுமாறு இஸ்லாம் எமக்கு கற்றுத் தருகின்றது.
இதற்கு மாற்றமாக பண்டிகை என்ற பெயரில் மது அருந்தி, போதையில் மிதந்து, சூதாட்டத்தில் புதைந்து, வீடுகளிலும் வீதிகளிலும் வன்முறையை ஏற்படுத்தி சண்டைசச்சரவுகளில் ஈடுபட்டு, துன்புற்று சீரழியும் நிலையை இஸ்லாம் தடுத்துள்ளது.
உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டாடுவதற்கென்று சில தினங்கள் இருக்கின்றன அந்த தினங்களில் அந்தந்த சமூக மக்கள் தங்கள் மன விருப்பப்படி யெல்லாம் சந்தோஷமாக இருப்பார்கள். குறிப்பாக அந்த தினங்கள் பெருவாரியான மக்களுக்கு கேளிக்கைகளுக்குறிய தினங்களாகவே கழிந்து விடும். முஸ்லிம்களுக்கு மகிழ்சிக் குறிய தினங்களாக இஸ்லாம் இரண்டு தினங்களை ஏற்படுத்தியுள்ளது அதில் ஒன்று நோன்புப் பெருநாள் தினமாகும். ரமளான் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் உலக முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்சிகரமான நாளாகும். ஏனெனில் அன்று பெருநாள் தினம். இதர மக்களைப் போன்று கேளிக்கை விளையாட்டுகளில் இந்த நாள் கழிந்து விடக் கூடாது. மாறாக இறைவனை அதிகம் அதிகம் நினைவுக்கூறுவதிலும், தாளாரமாக தான தர்மங்கள் வழங்கி பிறர் மகிழ்சியில் மன சந்தோஷம் அடைவதிலும் இந்த நாளை கழிக்க முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.
நன்றி :http://kky30100.wordpress.com

2 comments:

Anisha Yunus said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!