Saturday, September 25, 2010

தமிழ் அல்-குர்ஆன் - 96 சூரத் அல் -`அலக் (The Clot) - (Tamil Quran - 96 Surat Al-`Alaq (The Clot) - سورة العلقسورة العلق


(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
அல்-குர்ஆன் 96:2
´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:7
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:8
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:9
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
96:10
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
96:11
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:12
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
96:13
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
96:14
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
96:16
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
96:17
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:18
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
96:19
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

No comments: