Thursday, August 6, 2020

கவிதை - ஹிரோஷிமாவும் சில அணுகுண்டுகளும்


by நி.அமிருதீன்

#      அன்று 


     ஹிரோஷிமாவிற்கு 


அதிகாலையும் 


 இருளாகவே


 விடிந்தது! -பெரும்


 வெடிச்சத்தத்தோடு !!


#     வெடிச்சத்தம்


நின்ற பின்னும்


பரவியிருக்கும்


கந்தக வாடை வீசும்


புகை மண்டலங்கள்


ஆங்காங்கே


அடர்த்தியாய் !!


#     கண்ணுக்கெட்டிய வரை


சிதறிக்கிடக்கும்


சதைப் பிண்டங்கள்


கோரமாய் !!


#     பிரிந்து கிடந்த 


பிஞ்சு விரல்கள்


 பரிதாபமாய் !!


#     சாலைகளில் 


சரிந்து ஓடும் ரத்தம்


 சகதியாய் !!


#     உணர்வுகள் பிரிந்தும்


உயிர் உதிராத - சில


உடல்கள்!


பரிதவிப்பாய் !!


#     தலையிலிருந்து


விடுதலைபெற்று


வீதிக்கு வந்த- சிலரது


மூளைகள்!


சிதிலமாய் !!


#     தரையில் கழிவுகளாய்


மனிதக் குடல்கள்


அசிங்கமாய் !!


#     சிலருக்கு


சில இடங்களில் காயம்


பலருக்கு


உடலே காயமாய் !!


#     அலங்கரிக்கப்பட்ட


மணவறை - மாறியது


பிணவறையாய் !!


#     தெருவெங்கும்


மரண ஓலங்கள்


பிணக் குவியல்கள்


கொடூரமாய் !!


#     பிரிந்தவர்கள்


ஒன்று சேர்ந்தார்கள்


சடலங்களாய் !!


#     மருத்துவமனைகளில்


பல்லாயிரம் மக்கள்


திகைத்தவர்களாய் !!


#     பிணக் கிடங்கில்


பெற்றோரைத் தேடும்


பிஞ்சுகளின் பார்வைகள்


ஏக்கமாய் !!


#     பாலுக்காக


இறந்துவிட்ட தாயின்


மார்போடு போராடும்


மழலைகள்


பாவமாய் !!


#     ஆங்காங்கே


கருகிய மரங்களும்


கசங்கிய குடிசைகளும்


மீதியாய் !!


#     ஆரவாரமான


ஹிரோஷிமா


இப்போது


மயானக் காடாய் !!


#     இறைவா


என்று தீரும்


இந்த வெடிகுண்டு


நாசம் ?...............    …………………………..    …………....


(06/08/1946...நாகசாகி ஹிரோஷிமா மீது குண்டு வீசப்பட்ட தினம்)


From: amir voice <amirdeen71@gmail.com>

 வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம். (06/08/1946.)

அந்த நாளை முன்னிட்டு ஒரு கவிதையை எழுதி உள்ளேன் 

இப்படிக்கு 

அமிருதீன்

திருச்சி.

2020-ஆகஸ்ட்-6.


--

தகவல் தந்தவர் :முதுவை ஹிதாயத்

www.mudukulathur.com

muduvaihidayath@gmail.com

No comments: