Saturday, August 8, 2020

அவள் என் பார்வையில்

 வானவில்லாய்

உன் புருவங்கள் கொடை பிடிக்க

நீல நிற மீன் களின் கரு விழிகளாய்

உன் விழிகளின் பார்வை பல இடம் சென்று வர


மென்மையான தென்றலை உள்வாங்கி

சூட்டோடு வெளியாகும் காற்றினால்

உன் நாசி சூடாகியதால் சிகப்ப வண்ணமாய் காட்சியளிகின்றது


ரோஜா மலரின் இதழ்கள் விரிவதுபோல்

விரியும் உன் வாய் இதழ்கள்

முத்துச் சிதருவதுபோல் வார்த்தைகளை உதிர்கின்றன

உதிரும் சொற்கள கோர்வையாய் கவிதையை தருவதால்

ஆப்பிள் நிற மென்மையான தாமரை கண்ணங்கள்

சிகப்பு ரோஜா வண்ணமாய் மாறுகின்றன உவகையால்

வார்தைகள் கவிதையாய் வந்தமையால் வாயசைத்து

ஓசை எழுப்பி பாடல்களைப் பாட


வெண்டைக்காயை ஒத்த மென்மையான் விரல்கள்

வீணையைத் தேடாமல்

வாழைத்தண்டு ஒத்த உன்

தொடை மீது தாளம் போடுகிறது

இயல்பாய் இசை மீது உன்னிடமிருக்கும் காதலால்

No comments: