Wednesday, November 7, 2018

கடந்த கால காட்சியெல்லாம் கண்ணில் அலையாய் மோதி டும்

அபுதாபியில் நடந்த அய்மானின் 443வது செயற்குழு கூட்டத்தில், தாயகத்திலிருந்து வருகை தந்த கலைமாமணி தேரிழந்தூர் தாஜுத்தீன் அண்ணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அபுதாபி மக்களால் அய்மான் பாடகர் என்று அன்புடன் அறியப்பட்ட அய்மானின் ஆரம்ப கால தூண்களில் ஒருவர். அய்மானுக்காகவும் சமுதாயத்திற்காகவும் தன்னை அற்பணித்தவர் தாஜுத்தீன்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் அய்மானில் தன் நினைவலைகளை, அருமையான காலங்களை கணீரென்ற குரலில் பாடி
கடந்த காலத்துக்கு நம்மையும் அழைத்துச் சென்று அசத்தினார்.

"கடந்த கால காட்சியெல்லாம்
கண்ணில் அலையாய் மோதி டும்
நடந்த யாவும் நெஞ்சை விட்டு
நீங்க மறுத்தே நிலைத்திடும் "

No comments: