Tuesday, April 3, 2018

கப்பலுக்கு போன மச்சான்.....

இளம்வயதில் திருமணம் முடித்து
மகிழ்வாக  கொஞ்சிவிலையாடும்
வயதில் பிழைக்க வெளிநாடு சென்று
கனவில்  முழ்கி வாழும் என் அன்பு
நெஞ்சங்களுக்கு இந்த பாடல் சமர்
பணம்

தன்னை உருக்கி பிறருக்கு வெளிச்சம்
கொடுக்கும் மெழுகு போல்
தன்னை உருக்கி தன் குடும்பத்துக்ககாக
வாழும் ஜிவன் தான் வெளிநாட்டில்
வசிக்கும் மனிதன்



வா! வந்து பார் ! வர்ணித்தது போதும்.
கனியென வர்ணித்த கன்னங்கள் குழி விழுந்தன
முத்தென வர்ணித்த பற்கள் சொத்தை விழுந்து சிதறின

கட்டான உடல் கலை யிழந்து போயின
உதிரும் முடியும் நிறம் மாறும் முடியும்
பருவ மங்கையாய் இருந்த தோற்றத்தை மாற்றின
இன்னும் இருக்குமிடத்திலிருந்து வர்ணனை செய்கிறாய்

வா! வந்து பார்!
வரி வரிகளாய் வர்ணித்தது போதும்

நாட்கள் நகர்கின்றன
ஆண்டுகள் பறந்துவிட்டன

பறந்து போன இடம் அடைக்கலமானதோ
இருந்து வாழ்ந்த இடம் நினைவை விட்டு அகன்றதோ

பெண்ணின் பொறுமையால்
என்னின் நிலை அருமை அறியாமல் போனாய்

போனது போகட்டும்
இணைந்தவள் இருக்கிறாள்
இறக்கம் கொண்டு வந்து கண்டு விடு
இணைந்தவள் இறப்பதற்குள்

No comments: