Monday, April 30, 2018

பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாகச் சந்திக்கும் பிரச்சனைகள்

: பெண்கள் ஆணுக்கு நிகராக வேலைக்குச் செல்வது சகஜமாகிவிட்ட இன்றைய சூழலில் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாகச் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
அவற்றில் முதன்மையான பிரச்சனை மாதவிடாய் கோளாறுகள். மாதவிலக்கு சரியான முறையில் சரியான சுழற்சியில் வந்தால் மட்டுமே ஒரு பெண் ஆரோக்கியமானவளாக கருதப்படுவாள். ஆனால், தற்போது உள்ள காலச் சூழ்நிலையில் 90% பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகள் உள்ளது என்பது ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

மாதவிலக்கின் போது வெளியேறுகிற ரத்தம் அசுத்தமானது என்றும் அது எத்தனை அதிகமாக வெளியேறுகிறதோ அத்தனை நல்லது என்றும் பலருக்கு  தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. ஆனால் அதிக ரத்தப்போக்கு ஆரோக்கியமானதில்லை ஆபத்தானது.

25 முதல் 30 நாட்களுக்குள் மாதவிலக்கு வர்றதும் 5 நாட்கள் நீடிக்கிறதும் தான் இயல்பானது. அந்த 5 நாட்கள்ல 25 முதல் 80மி.லி ரத்தம்  வெளியேறலாம். 80 மி.லிக்கு கூடுதலாகவோ, 5 நாட்களைத் தாண்டியோ, ரத்தபோக்கு இருந்தா அது அசாதாரணமானது சந்தேகப்படணும்.


13-14 வயசுல வயசுக்கு வர்ற ஒரு பெண்ணுக்கு முதல் சில மாசங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி மற்றும் வெளியேறுகிற ரத்த போக்கின் அளவுல  மாற்றம் இருக்கலாம். அது கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். அதுவே 18-19 வயதிலும் தொடர்ந்தாலோ, மாதவிலக்கு நாட்கள்ல அந்தப்பெண்  ரொம்பக் களைச்சு சோர்ந்து போனாலோ அலட்சியப்படுத்தாம மருத்துவரை பார்க்கணும். அதிக படியான ரத்தப் போக்குக்கு நிறைய காரணங்கள்  இருக்கலாம்.

ரத்த தட்டணுக்கள்ல ஏதாவது குறைபாடு இருக்கலாம்.  கர்ப்பபையோட உள்பக்க லைனிங் பாகம் அப்படியே உதிரும் போது தான் அது ரத்தப்போக்கா  வெளியேறும். பிறகு புது திசுக்கள் உருவாகும். இந்த இயக்கத்துல கோளாறு இருக்கலாம். கர்ப்பப்பைல தொற்று அல்லது கட்டி,  கர்ப்பப்பை வீக்கம்னு பல காரணங்களால உதிரப்போக்கு அதிகமாக இருக்கலாம். கர்ப்பபைக்கு வெளியில உருவாகிற கர்ப்பம் கர்ப்பப்பை வாய் கட்டி, மற்றும் தொற்று தைராய்டுனு இன்னும்  சில காரணங்களையும்  குறிப்பிடலாம். அதனால ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறப்ப சின்னப் பொண்ணுங்களுக்கு அப்படித்தான் இருக்கும் போக  போக சரியாயிடும்னு நினைக்க வேண்டாம்.  ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவும், தைராயிடும் சரி பார்க்கப் படணும்.

இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கு மனநல பாதிப்பு, தவறான உணவு, சரியான தூக்கம் இல்லாமை, ஷெய்த்தானின் தீண்டுதல் இதன் விளைவு குழந்தை இன்மை. கருச்சிதைவு, மனநல பாதிப்பு, எந்த வேலைலும் ஈடுபாடு இல்லாமை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இறைவனின் 99 திரு நாளங்களில் "" يا مصور, يا متكبر"" யா முஸவ்விரு, யா முகப்பிரு ""

என்ற இஸ்முகள் மாதவிடாய் நோய்கள் மற்றும் கர்ப்பத்தில் குழந்தை இன்மையை போக்கி குழந்தை தரிக்க செய்யும் சக்தி இந்த இரண்டு இஸ்முக்கும் உண்டு.

அதனுடன் இந்த இறை வசனத்தையும் அதிகம் அதிகம் காலையிலும் மாலையிலும் தொடர்ந்து ஓதி தண்ணீரில் ஊதி குடியுங்கள். இன்ஷா அல்லாஹ் மேலே கூறிய பிரச்சினைகள் சரியாகும்.

هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 
அவன்தான் கர்ப்பப் பைகளில் தான் விரும்பியவாறு (ஆணாகவோ, பெண்ணாகவோ) உருவம் அமைக்கின்றான். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
(அல்குர்ஆன் : 3:6)

        மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
                (தல்ஸமாத்)
         மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments: