Monday, April 16, 2018

நிலையற்ற வாழிவின் நிறைவு ....!


காலையில் கண்விழித்தால்
மட்டுமே தெரியும்
உடலின் உயிர் பிடிப்பு

✓முழுப்பகலும் உழைத்தால்
மட்டுமே தெரியும்
முன்னேற்றத்தின் முதல் படி

✓சம்பாத்தியத்தில் சேமித்தால்
மட்டுமே தெரியும்
எதிர்காலத்தின் பிரகாச ஒளி

✓முழுமனதுடன் தர்மம்செய்தால்
மட்டுமே தெரியும்
செல்வச் செழிப்பின் அருமை

✓பொருள்விளங்க கற்றால்
மட்டுமே தெரியும்
செருக்கற்ற கல்வியின் திறன்

✓சொல்வதை செய்தால்
மட்டுமே தெரியும்
உலக வாழ்வின் வரம்

✓தன்னிலை விளக்கமறிந்தால்
மட்டுமே தெரியும்
மாற்றார் மனதின் ஆழம்

✓இயற்கையுடன் ஒன்றினால்
மட்டுமே தெரியும்
இறைவனது படைப்பின் அழகு

✓விட்டுக்  கொடுத்தால்
மட்டுமே தெரியும்
ஓங்கும் ஒற்றுமையின் உணர்வு

✓இறைதியானத்தில் ஆழ்ந்தால்
மட்டுமே தெரியும்
நிலையற்ற வாழிவின் நிறைவு


Abdul Kader Sangam

No comments: