Monday, April 16, 2018

அழகிற்கு அரணாக நின்று அரவனைத்து வாழ்பவனே ஆண்

இந்த உலகில் பெண்களே அழகு,
தாயாக, தங்கையாக,
மங்கையாக, மனைவியாக, மகளாக,
மறுபடியும் தொடர்ந்து மருமகளாக, பேத்தியாக பெண்கள் தான் பேரழகு..!

அடுப்பூதினாலும்,அதிகாரத்தில்
அமர்ந்தாலும்,அநீதிக்கு அடங்காத
அடக்கமான பெண்கள் அனைவருமே அழகு..!


கலையாக, கவிதையாக,
காளையர் கண்களுக்கு
காமத்தின் கருவியாக...
விலைக்கு வாங்கி முகர்ந்து வீசும்
வண்ண வண்ண பூக்களாக,

பெண்ணின் அழகை இங்கே...
வாங்கி விற்கும் ஊடகங்களால்
உளவியல் நோய் கொண்டு..
ஆளுமையான ஆண் வர்க்கம்
ஆபாச சந்தையிலே....
அசிங்கப் பட்டு கிடக்கிறது ..!

ஆம்.... எப்போதுமே.... பெண்கள் தான்
ஆபத்தான பேர் அழகு..!

அந்த அழகிற்கு அரணாக நின்று
அரவனைத்து வாழ்பவனே ஆண்
என்ற சொல்லுக்கு அருகதை உள்ளவன்.!

பெண்ணினத்தை மதிக்காத,
பேரரசு நாடெல்லாம்....
பெயர் அழிந்துப் போனதுண்டு..!

 Haja Maideen

No comments: