Friday, February 1, 2013

ஒன்று இழந்து ஒன்று சேர்ப்பதுதான் நியதியானது

ருந்த இடம் இடிந்தாலும்
இருக்குமிடம் உயர்ந்தாலும்
இருந்த இடம் இதயத்தில்
இனிமையாய் நிலைத்து நிற்கும்

வந்த இடம் புதிமையானது
புதிய இடம் புகழைத் தந்தது
வந்தவர்கள் புகழை நாடி வந்தனர்
வந்தவர் வாயார வாழ்த்திச் சென்றனர்

வந்து போனவர் மனதில் உள்ளதனை நான் அறியேன்
வாழ்த்துச் சொன்னதில் உள்ளம் உவகைக் கொண்டது
வந்த இடத்தில இருக்க கூடி வாழ்ந்த மக்களில்லை
வசதி நாடி வகுத்த இடத்தில் இருக்க நேரமில்லை

வசதியாக கட்டிய இடத்தில சேர்க்க பொருட்கள் வேண்டும்
வசதியை உருவாக்க பணம் வேண்டும்
இருக்க வேண்டிய இடத்தில் இருக்க முடியாமல்
இல்லாளை விட்டு நிமிடமும் பிரிய மனமில்லாமல்
இல்லாளை வசதியாக கட்டிய வீட்டில் விட்டு
வேண்டிய பணம் சேர்க்க பயணம் ஓட வேண்டும்

பொருளும் பணமும் வசதியைத் தந்தது
பணம் வர வேண்டியவர் வந்தனர்
இருக்க வேண்டியோருடன் இருக்க நேரமில்லை 
ஒன்று இழந்து ஒன்று சேர்ப்பதுதான் நியதியானது

நம்மோடு நிலையாக நிற்பது நிலையானதில்லை
நம்மோடு சேர்த்து வைத்த பொருள் நம்மோடு வருவதில்லை
நம்மோடு வருவதும் நிலையாக நிற்பதும் இறைவனது வாக்கோடு
நம்மோடு வந்து சேரும் நன்மையை சேர்த்து வைத்தால்

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

அழகிய வசனத்துடன் பொருள் உள்ள கவிதை !

தொடர வாழ்த்துகள்...