Wednesday, February 6, 2013

கடுகளவு வருந்தவில்லை குற்றம் செய்த மனசு


குளத்துலே தண்ணியில்லே மீனுமில்லே கொக்குமில்லே
குளத்துலே தண்ணி வத்திப் போச்சு மீனும் செத்துப் போச்சு
குளத்துலே மீனுமில்லே கொக்கும் வரவுமில்லே
குளத்துலே தமாரையுமில்லே தமாரைப் பூவுமில்லே
குளத்துலே தமாரைப்பூ இருக்கையிலே மதிப்பாச்சு
குளத்துலே கண்ட தமாரை கொடிமேலே ஏறிப் போச்சு
கொடிமேலே ஏறிய தமாரை மக்களை பிரிக்கப் போச்சு

மழையைக் கண்டு நாளாகுது
மழையில் நனைந்து நாளாகுது
பிழையைக் காண சுலபமாகுது
பிழைக்க வழி காண கடினமாகுது

கடுகளவு குற்றம் காண கடுஞ்சிறை நெருக்கமாகுது
கடுகளவு நன்மை செய்ய நேரமாகுது
கடுகளவு வருந்தவில்லை குற்றம் செய்த மனசு
கடுமையான குற்றம் செய்தாலும் கண்டுகொள்ள மனிதரில்லை

No comments: