Sunday, February 3, 2013

உன் நிலைக்கு நீயே காரணமானாய்

உனக்கு வருத்தத்தை உருவாக்கியது உன் செயல்
எனக்கு வருத்தத்தை உருவாக்கியது உன் நிலை
உன் நிலைக்கு நீயே காரணமானாய்
என் நிலைக்கும் நீயே காரணமானாய்

உனக்கு பணமும் புகழும் வேண்டும்
எனக்கு பணம் கொடுத்து உன்னைப் பார்க்க வேண்டும்
உனக்கு என்னை மகிழ்விக்க மனமில்லை
எனக்கு உன்னை வருந்த வைக்க மனமில்லை

உனக்கும் எனக்கும் விரோதமில்லை
உனக்கும் எனக்கும் விட்டுக் கொடுக்கும் மனமிருந்தால்
வந்துவிடு மனதோடு பேசுவோம்
வதந்திகளுக்கு இடம் தராமல் தவிர்ப்போம்

2 comments:

ஸாதிகா said...

என்னதொரு அழகான கவிதை.!!

mohamedali jinnah said...

சகோதரி ஸாதிகா அவர்களின் அன்புக்கு மிக்க மகிழ்வு