Sunday, May 13, 2012

நீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது!

 எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.இந்நீடூர் இராஜாதி ராஜவள நாட்டைச் சேர்ந்ததாகும்.
நெய்வாசல் பெயர் எப்படி வந்தது
நெய்த வாசல் என்பது நெய்வாசல் ஆக வந்தது . ஆடைக்கு வேண்டிய நூல்கள் இங்கும் அருகிலுள்ள கூறைநாட்டிலும் நூல்கள் நெய்து வந்தார்கள், நெய்வாசல் கீழத் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு பட்டுக்காரர் வீடு என்று இன்றும் சொல்வார்கள், அவர்கள் தெருவில் பட்டு நெய்ததை வைத்து அந்த பெயர் அடைமொழியாக வந்து விட்டது


ஒரே தெருவில் உள்ள ஒரு வரிசை வீடுகள் அடங்கிய பகுதி நீடூர் ஊராட்சியை சார்ந்தது
அதே தெருவில்அமைத்த எதிர் வரிசை வீடுகள் அடங்கிய பகுதி கங்கணம்புத்தூர் ஊராட்சியை சார்ந்தது.
இந்த தெருவிற்கு பெயர் கீழத் தெரு. இந்த தெரு நீடூர்-நெய்வாசல் மஹல்லா ஜமாஅத்தை சார்ந்தது.

நீடூர் ஒரு தனி ஊராட்சி ஆனால் புகழ்பெற்ற பழைமை வாய்ந்த நீடூர்-நெய்வாசல் பெயரில் ஊராட்சி கிடையாது. இது கங்கணம்புத்தூர் ஊராட்சியில் அடக்கம் .
நீடூர்-நெய்வாசல் மற்றும் நீடூர் ஆகிய இரண்டு ஊரிலும் முஸ்லிம்கள் அதிகம்.
உங்கள் ஊர் எது என்று நீடூர்-நெய்வாசல் மக்களைக் கேட்டால் எங்கள் ஊர் நீடூர் என்றுதான் சொல்வார்கள் நீடூர்-நெய்வாசல் என்று சொல்வதில்லை. இது ஒற்றுமைக்கு ஒரு உதாரணமா அல்லது நீடூர்-நெய்வாசல் என்று சொன்னால் மற்றவருக்கு புரியாதா!
நம் நாட்டில் எதனையோ பட்டணத்தின் பெயர்கள் மாற்றப் பட்டுவிட்டன மற்றும் சில நாடுகளின் பெயரே மாற்றப் பட்டுவிட்டன.
இந்த இரண்டு (நீடூர்-நெய்வாசல், நீடூர்) ஒரே ஊரின் பெயரை வைத்துக் கொண்டு பல மஹல்லா ஜமாஅத்தாக ஒற்றுமையுடன் செயல்படலாமே! (இப்பொழுதும் அல்லாஹ்வின் அருளால் ஒற்றுமையாகவே இருக்கின்றோம்) அதிகாரங்கள் பிரித்து அளிக்கப் பட்டால்(Distribution of powers) விளைவு நன்றாகவே இருக்கும். நீடூர் - நெய்வாசல் - பள்ளிவாசல்கள்
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா Mohamed Ali Jinnah https://www.google.com/maps/@11.127508,79.642969,258m/data=!3m1!1e3
Jazakkallahu Hairan நன்றி
http://nidurseasons.blogspot.com/2010/07/blog-post_7298.html

1 comment:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருமை அப்பா...ஜசாக்கல்லாஹ்