Wednesday, October 19, 2011

பயணம் செய்ய படங்கள் மற்றும் காணொளிகள் தூண்ட பார்த்து மகிழுங்கள் !



   பயணம் செய்வதில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அது பணத்தினை வீண் செலவு செய்வதாக அமைந்துவிடக் கூடாது. நம்மை நாமே சுற்றிக் கொண்டிருக்காமல் பல்வேறு மக்களை சந்தித்து பலவிதமான மக்களின் அறிவினை உள்வாங்கிக் கொள்வதில் நோக்கமாக பயணம் செய்வது சிறந்த முறையாகும் . எந்த எண்ணத்தில் உங்கள்  பயணம் உள்ளதோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும். உல்லாசம் தேடி மட்டும் நம் பயணம் அமைந்தால் அதில் ஒரு பயனுமில்லை. 

பயணம் செய்து பார்த்து கிடைக்கும் அறிவு  மனதில் ஆமாக பதியும்.
உலக புத்தகத்தில் ஒரு பக்கம் வாசிக்க ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். பயணம்  மனதிற்கு மகிழ்வுடன் அறிவினையும் தரும்
 -----------------
குர்ஆன்10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.  
" சீனா தேசம் சென்றாயினும்   சீர் கல்வியை கற்றுக்கொள்" (நபி மொழி).
630. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் 'நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :1 Book :10
350. 'அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8

“The world is a book and those who do not travel read only one page.” – St. Augustine

Travel and change of place impart new vigor to the mind. ~Seneca

I dislike feeling at home when I am abroad. ~George Bernard Shaw

I travel a lot; I hate having my life disrupted by routine. ~Caskie Stinnett

Like all great travellers, I have seen more than I remember, and remember more than I have seen. ~Benjamin Disraeli

“He who does not travel does not know the value of men.” – Moorish proverb

“A journey of a thousand miles must begin with a single step.” – Lao Tzu

“Travel and change of place impart new vigor to the mind.” – Seneca

“A wise traveler never despises his own country.” – Carlo Goldoni


France
Paris's founders were probably the Gauls, who built a small settlement on the left bank of the Seine. The Romans reached here at an early stage, led by Julius Caesar. Paris became a true capital in the year 987 when Ugo Capeto founded a new dynasty. Paris began to develop not only as an urban centre, but also from the cultural point of view. Paris has retained its place in the history of mankind and its culture.

பார்க்க பரவசமூட்டும் பாரிஸ் 
பிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள்.ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது .உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழுபவர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்துவிடுங்கள் மற்றதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்ற பழமொழி உண்டு.அதனால் அந்த நாட்டு பிரஜையாகவும் ஆகி விடலாம் .அல்லது அந்த நாட்டு உரிமை பெற்றவர்களை(பிரஜை) திருமணம் செய்து கொண்டாலும் அது கிடைக்கும்.பிரான்ஸ் சென்று பார்த்து மகிழ்ந்து வர வாழ்த்துக்கள் அதுவரை இங்கு படம் பார்த்து மகிழுங்கள் 















































2 comments:

vadakaraithariq said...

ரொம்பவும் மெனக்கெட்டு இருக்கிறீர்கள் அண்ணா. நல்லா இருக்கு.

கிளியனூர் இஸ்மத் said...

அருமையான கருத்துக்களுடன் புகைப்படங்களும் இணைந்து பயணத்தை கலக்குகிறது...