



கருப்பு-வெள்ளை, ஈஸ்ட்மென் படங்களிலேயே இரட்டை வேடத்தில் நடிப்பது சாதாரணமாகி விட்டபோது, கம்யூட்டர் கிராஃபிக்ஸ் யுகத்தில் வேறொருவரை வைத்து இரட்டை வேடத்தில் நடிக்க வைத்திருப்பதில் புதுமை எதுவும் இருப்பதாகக் கருதமுடியவில்லை.
பெரிய நடிகர்களுக்குச் சண்டைக் காட்சிகளில் டூப் போடுவது திரைப்பட உலகில் காலங்காலமாக நடந்து வருவதே! எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோருக்கும் டூப் போட்டதுண்டு. இப்போது சண்டைக் காட்சிகளில் புதிய முறைகளும் பிரமிக்க வைக்கும் வேகமும் வெளிநாட்டு உத்திகளும் பயன்படுத்தப்படுவதால் வெளிநாட்டு நடிகர்கள் டூப் ஆகிறார்கள்.
தகவல் யுகத்தில் மூடி மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனுமளவுக்கு எல்லா விசயங்களும் பொதுவில் வந்துவிட்டன. ஒரு படத்தின் வெற்றிக்குப் பின்னணியில் பலர் இருந்தாலும் ஒரு சிலரே முன்னிறுத்தப்படுகிறார்கள். சூப்பர் ஸ்டாருக்கு டூப்பாக நடித்திருப்பவர் பெயரை "டூப்பர் ஸ்டார்" என்று போடாவிட்டாலும் டைட்டிலில் எங்காவது ஓர் மூலையில் அவரது பெயரைப் போட்டிருப்பார்கள்.
நீங்கள் கூறிய வீடியோவை இந்தச் சுட்டியில் காணலாம்: http://www.youtube.com/watch?v=0zak6CtB-2E


ஒரு பத்திரிக்கை வாசகனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதன் உள்ளடக்கமே காரணமன்றி, தளமில்லை.
டென்மார்க் நாட்டின் ஜெலாண்டன் போஸ்டன் பத்திரிக்கையில் வெளியான கேலிச்சித்திரம் உலகளவில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு அதன் உள்ளடக்கமே காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.







சக மனிதர்களுடன் பேசும்போது வாயிலிருந்து துர்நாற்றம் வந்தால் எதிரிலிருப்பவர் முகத்தைத் திருப்பிகொள்வதைத் தவிர்க்க வாய் துர்நாற்றம் இல்லாமல் இருப்பது அவசியம். அவ்வாறு துர்நாற்றம் எழாமலிருக்கு சாப்பிட்டபின் பல் குத்தும் பழக்கம் ஏற்பட்டிருக்கும்.
மாமிச உண்ணிகளில் மனிதன் மட்டுமே பேசுவதால் பல்குத்தும் பழக்கம் மனிதர்களிடம் மட்டும் உள்ளது!




SOS குறியீட்டை நேராகவும் தலைகீழாகவும் குழப்பமின்றி வாசிக்க முடியும் என்பதால் SOS - Save our Soul என்று உயிர்காக்கும் அழைப்பாகவும் சொல்லப்படுகிறது. உலகலாவிய அபயக் குறியீடாகவும் SOS கருதப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.


'லோக்நாயக்' என அழைக்கப்பட்ட ஜெயப்ரகாஷ் நாராயண் 1960 ஆம் ஆண்டுமுதல் இதைவலியுறுத்திக்கொண்டேயிருந்தார்.
எம்.ஜி.ஆர். 1972ஆம் ஆண்டில் அ.தி.மு.க.வைத் துவக்கி எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதைப்பற்றிப் பல தடவை வலியுறுத்திக்கொண்டேயிருந்தார். ஆனால் அவர் ஆட்சியைப் பிடித்ததும் இதை மறந்துவிட்டார்.
1977 இல் மத்தியில் ஆட்சியைப் பிடித்து ஜனதாக் கட்சி ஆண்டபோதும் 1989ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்துத் தேசீய முன்னணி ஆண்டபோதும் இந்தத் திட்டம் பற்றி அலசப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகளின் கடுமையான எதிர்ப்பால் செயல்வடிவம் பெறவில்லை.
2001 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட 'பஞாயத்ராஜ்"சட்டத் திருத்தத்தின்படி அம்மாநிலத்தின் அனுப்பூர் நகராட்சியில் 2002 ஆம் ஆண்டு இது நடைமுறைப்படுத்தப் பட்டு , மக்களின் நலனுக்கு ஏற்பச்செயல்படாத உறுப்பினர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். இரண்டாண்டுகளுக்கு முன் சட்டீஸ்கர் மாநிலத்தில் மூன்று நகராட்சி மன்றங்களில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி மன்றங்களில் செயல்படுத்தப்படும் இம்முறையைச் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் கொண்டு வருவதற்கு அரசியல்வாதிகளே தடையாக உள்ளனர்.
சோம்நாத் சட்டர்ஜி நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தபோது இத்திட்டத்திர்கு ஆதரவளித்தார். "இம்பீச்மெண்ட்" மூலம் ஜனாதிபதியையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்ய முடியும்; நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் பிரதமரையும் முதலமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய முடியும் எனும்போது இந்த அதிகாரம் பெற்றுள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை ஏன் திரும்ப அழைக்கக் கூடாது என அவர் ஒரு கருத்தரங்கில் பேசும்போது வினவினார்.
இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் ஊழல் கறை படிந்த மற்றும் பொறுப்பற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களை மாற்றி நல்ல நிவாகம் தர முடியும்.
லட்சக்கணக்கில் செலவு செய்து தேர்தலைச் சந்திப்பதால் அரசியல் கட்சிகள் இதற்கு ஒத்துழைக்கா எனில், குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி, தன் உறுப்பினரைத் திரும்பப் பெற்றுவிட்டு மக்கள் விரும்பும் வேறொரு நல்லவரை அவ்விடத்திற்கு நியமிக்கலாம் எனச் சட்டம் கொண்டுவந்தால் ஒருவேளை அரசியல்வாதிகள் ஒப்புக்கொள்வார்களோ என்னவோ?


சின்ன் மற்றும் பெரியத் திரைகள் வழிகளைச் சொல்லித் தருகின்றன.
உளவியல் காரணங்களைத் தேடுவதைவிட சமூகம் மற்றும் பண்பாட்டு வீழ்ச்சி தொடர்பான காரணங்க்ளையே இதில் தேடவேண்டும்.
ஆள் கடத்தலுடன் பாலியல் வன்முறைகளும் சேரும்போது உளவியல் காரணங்களையும் தேடவேண்டும்.
ஏனெனில் இவ்வகையில் பணம் கோரப்படுவது குறைவே.
இவை மட்டுமின்றிக் கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு அடுத்தவனுடன் இளம் தாய்மார்கள் ஓடிப்போவதையும் இவ்வகைத் தொடர்புக்காக கணவன் அல்லது மனைவிகள் இவர்களால் கொல்லப்படுவதையும் சில நாட்கள் அல்லது வாரங்கள் பழகியவனுடன் கூட இளம் பெண்களும் மாணவிகளும் தம் பெற்றோரையும் குடும்பத்தையும் துறந்து ஓடிப்போவதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இது தொடர்பான ரஸ்ஸலின் கட்டுரையையும் வாசிக்கவும்... http://inneram.com/2010111211844/kidnapes-government-media-and-people



ஆனால் அசோக் சவான் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல் செய்யக்கூடாது.


ஒரு திரைப்படத்தில் விவேக் நடித்த நகைச்சுவைக் காட்சியில் சின்னத்திரைக் கதாபாத்திரங்களின் முறையற்ற பாலியல் உறவுகள் தொடர்பான கதையமைப்பைக் கிண்டல் செய்திருந்தார்.


அது உலகறிததாயிற்றே!
இந்நேரம் தளத்தில் இது பற்றி ரஸ்ஸலின் அலசலில் சொல்லப்பட்டிருந்ததே?


மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டதா?
Source : http://www.inneram.com/2010111411885/vanagamudi-answers-14-11-2010
----------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment