Wednesday, April 22, 2020

ஆபத்து ! ஆபத்து !



--- ஹாஜி மு. ஹிதாயத்துல்லா

இளையான்குடி

பேராசை ஆபத்து ! பிடிவாதம் ஆபத்து !

பெரியோர் சொல் கேளாததும் – மார்க்கம்

பேணாமல் வாழுவதும் பெரும்பாலும் ஆபத்துதான் !


சாராயம் ஆபத்து, சண்டையும் ஆபத்து ! – வீண்

சந்தேகமும் ஆபத்து தான் ! – இங்கே

தன்மானமில்லாமல் பெண்மானை வதைப்போர்கள்

சந்திப்பார் ஆபத்துதான் !

ஏராள நகைபோட்டு எங்கேயும் செல்லாதே !

எந்நாளும் ஆபத்துதான் ! – சிலர்

எங்கேதான் சென்றாலும் ஓசிநகை கேட்கின்றார் !

அதுவும் ஆபத்துதான் !




ஆராய்ந்து சிந்தனை செய்! அப்புறம் முடிவை எடு !

ஆனந்தம் நீ காணுவாய்!

அவசரச் சமையலில் ருசியே இருக்காது

மனிதா நீ உணருவாய் !


மது, மாது ஆபத்து, சூதும் தான் ஆபத்து

மனதிலே நீ யெண்ணுவாய் !

மனதாரப் பொய் சொல்லல், மற்றோரைக் கோள்சொல்லல்

தருமே பேராபத்துதான் !


சதிகாரர் ஆபத்து, சதை நட்பும் ஆபத்து !

சக்திக்கு மீறியே தான்

கடன் வாங்கல் ஆபத்து ! கட்டாயம் ஆபத்து !

கவனம் நீ கொள்ளுவாய் !

அதிகாரத் தோரணையில் அநீதி செய்யாதீர் !

ஆபத்து ! ஆபத்து தான் !

அடைமானப் பொருட்களை அபகரிக்க எண்ணுவதும்

ஆபத்து ! நீ உணருவார் !


நன்றி :

இனிய திசைகள்

ஏப்ரல் 2016
முதுவை ஹிதாயத்

No comments: