Sunday, April 5, 2020

ஒரு கிரீடத்தின் கதை

Vavar F Habibullah
ஒரு கிரீடத்தின் கதை


கொரோனா பற்றிய சில
உண்மைகள், வைராலஜி
வல்லுநர்களையே சற்று
மிரட்டத்தான் செய்கிறது.
பேட் எனப்படும் ‘வவ்வால்கள்’
வைரஸ்களை ஏற்றிச் செல்லும்
வைரஸ் ‘ஏர் கார்கோ’ வாகவே
செயல்படுகிறது.இப்படி பறந்து
திரியும் இந்த வவ்வால்கள்
சில வகை மிருகங்களுக்கு
தங்கள் வசம் உள்ள வைரஸ்
களை டெலிவரி செய்கின்றன.



இதில் பேங்கோலின் எனப்படும்
ஒரு வகை எறும்பு திண்ணும்
பிராணியைத் தான் தன் இனத்தை
பரவச் செய்யும் ஒரு ஸ்டாகிஸ்ட்
ஆக இந்த வைரஸ் தேர்வு
செய்கிறது. நாய் பூனை
பெர்ரட் போன்ற இதர
மிருகங்களை தவிர்த்து
இந்த பேங்கோலின் மீது இந்த
வைரஸ் மோகம் கொள்ள என்ன
காரணம் என்று ஆராய்ந்தால்...

பேங்கோலின், சீனர்களின் மிக
உயர்ந்த காஸ்ட்லியான உணவு.
உலக சைனா உணவகங்களில்
இது பிளேட் அறுநூறு டாலர்
வரை விலை போகிறது.இதன்
இரத்தம் கலந்த உணவு,இருநூறு
டாலர்.இதன் மாமிசம் மிகவும்
சுவைமிக்கது என்கிறார்கள் இதை
சமைத்து பரிமாறும் சமையல் கலை
வல்லுநர்கள்.சைனா,மலேசியா
சிங்கப்பூர் தாய்லாந்து பிலிப்பைன்ஸ்
சைன உணவகங்களில் இதன்
மாமிச ரோஸ்ட், நாவில் நீர் ஊற
வைக்கும் என்கிறார்கள் இதன்
சுவை அறிந்தவர்கள்.

இந்த சிறு வகை மிருகத்தின்
எந்த பாகமும் வீண் போவதில்லை.
இதன் பாதுகாப்பு கவசமான
செதில்களை வறுத்து பஸ்ப
மாக்கி மருந்து தயாரிக்கும்
மருந்து நிறுவனங்கள் சைனாவில்
அதிகம்.இளமை பொலிவுக்கும்
வீரியத்திற்கும்,பால் அதிகம்
சுரக்கவும்,பிள்ளை பெறவும்
தீராத நோய்களை தீர்க்க உதவும்
அற்புத நோய் நிவாரணி என்றே
இதில் தயாராகும் மருந்தை
சீனர்கள் நம்புகிறார்கள்.

பேங்கோலின் மாமிசத்தை
சுவைத்தவர்களுக்கோ அல்லது
உஹான் பிஷ் மார்க்கட்டில்
இந்த மிருகத்தை அல்லது
செதில்களை தொட்டவர் மூலம்
முதலில் இந்த நோய் தொற்று
உருவானதாக சீன மருத்துவர்கள்
உலகிற்கு அறிவித்தனர்.இது
சைனா ஸ்பெசல் லேபில் உருவான
‘பயோ ஆயுதம்’என்றும் அமெரிக்காவே
தனது ‘ஸ்பை சோல்ஜியர்’ மூலம்
இந்த வைரஸை பரப்பியது என்பது
போன்ற வதந்திகள் எல்லாம்
உண்மை அல்ல.

வவ்வால்கள் மூலம் பேங்கோலின்
களை அடைந்த இந்த வைரஸ்
அவற்றின் மூலமே மனிதர்களை
யும் சீண்டி பார்க்கிறது.கிரீடம் போல்
தோற்றம் தரும் ஸ்பைக் தூண்
டில்கள் தன்னை சுற்றிலும்
இருப்பதாலேயே இதன் பெயர்
கொரோனா. “கொரோனா”
என்றால் ‘கிரீடம்’ என்று பொருள்.

மனிதன் உடலுக்குள் நுழையும்
இது பல தடைகளையும் தாண்டி
சுவாசப்பையை தன் இருப்பிடமாக
தேர்வு செய்கிறது.கொக்கி போன்ற
உபகரணங்கள் மூலம் செல்களை
தன் இரையாக்கும் இந்த வைரஸ்
நொடிப் பொழுதில் பல்கிப் பெருகி
நுரையீரலை தன் வசமாக்கி விடுகிறது.
இந்த வைரஸை சுமப்பவர்கள் தான்
பிறருக்கு நோய் பரவ காரணமா
கின்றனர்.வைரஸ் இருந்தாலும்
நோய் தடுப்பு சக்தி அதிகம்
உள்ளவர்களை இது அதிகம்
தாக்குவதில்லை.அவர்கள் மூலம்
நோய் தடுப்பு சக்தி குறைந்தவர்
களை தாக்க துணை புரிகிறது.

தடுப்பு ஊசி இல்லை.சரியான
தீர்க்கமான மருந்துகள் இல்லை.
ஜஸ்ட் சிம்ப்டமேடிக் டிரீட்மென்ட்
மட்டுமே இப்போது அவைலபிள்.
நோய் தாக்கி நன்றாக குணம்
பெற்றவரின் ரத்தத்தை எடுத்து
அதை(பிளாஸ்மா) நோயுள்ளவரின்
உடலில் செலுத்தினால் மட்டுமே
இந்த நோயை கட்டுக்குள் கொண்டு
வர இயலும் என்று மருத்துவ
வல்லுநர்கள் இப்போது
கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்த சிகிச்சை முறை அமலுக்கு
வருமானால்......நோயிலிருந்து
விடுதலை பெற்றவர் இரத்தம்
நோயாளிகளை விரைந்து குணம்
பெற வைக்க வழி வகுக்கலாம்.
குணம் அடைந்த ‘பாசிடிவ் கேஸ்
இரத்தம்’ கூட பிறரை காப்பாற்ற
உதவலாம்.அதுவரை நோய்
கண்டவரை உதாசீனம் செய்யா
தீர்கள்,ஏளனம் செய்யாதீர்கள்
அருவருப்புடன் பார்க்காதீர்கள்.
மதம் பார்க்காமல், மனிதனாக
பாருங்கள்....ஒரு வேளை
நாளை அவர் தரும் இரத்த
நன்கொடை கூட உங்கள்
நோயை குணப்படுத்து உதவலாம்.

dr.habibullah
Senior Paediatrician

No comments: