Sunday, November 10, 2019

இறைசிந்தனை / 🖋நூர் ஷஃபியா காதிரியா

Noor Saffiya
இறைசிந்தனை

கற்பனை யாவிலுமே எம்
கண்மணியே!
காவியம் படைப்பதிலே எம்
கண்மணியே!
கனவில் யாவிலுமே எம்
கண்மணியே!
காண்பது யாவிலுமே எம்
கண்மணியே!

அனைத்துமுமாய் ஆனதே;
அர்ப்பணமே!
அகிலம் யாவற்றிலுமே;
அங்கமாகுமே!
அகமியம் முழங்கியதே;
அருள் தாலாட்டே!
ஆட்சியின் பீடமே எம்
ஆதிக்கமாக்குமே!


நற்தவம் நம்மிலே
நிலைக்கட்டுமே!
நானிலம் புகழ்ந்திடும்
நாளாகட்டுமே!
நற்பண்பில் நம் உதிரமே
நாதராகட்டுமே!
நல்லடியாரில் சேர்த்தே
நாயனாகட்டுமே!

வெற்பெனும் மலைபோல,
வளமாகிடுமே!
வெற்றி ஒன்றே என
வாழ்வாக்கிடுமே!
வெறுங்கையினை
வேண்டியவை நிரப்பிடுமே!
வாரி வழங்கும் வாரிசின்
வல்லோனே ஆக்கிடுமே!

நானிலத்தில் நிமிர்ந்து
நலம் பெற செய்திடுமே!
நபியே தங்கள் கதி என
நனைந்தே பணிந்திடுமே!
நாவினில் சலவாத்திலே
நனைந்திடுமே!
பேரினம் கலந்தே
பெருமை சேர்த்திடுமே!
பெண்ணின குலமே
சிரம் பணிந்திடுமே!

யாங்கணும் சிறந்து
பேரின்பமாகிடுமே!
யா ரப்பே! யா ரசூலே!
திக்ர் முழங்கிடுமே!
அன்பெனும் உறவே
அண்ணலாராயிடுமே!
அதினிலே பெற்ற இனிய
அருள் வரமாகிடுமே!

அஹ்மதை வாழ்த்தும்
அகமாக்கிடுமே!
அஞ்சா நெஞ்சமென
அறிவாக்கிடுமே!
அதிகாலையில் உதித்த
அற்புதமாக்கினாய்!
ஆனந்த வந்தனம் என
வருகையாக்கினாய்!

அனைத்தும் நற்சொல்லில்
நளினமாக்கினாய்!
அல்லாஹ்வின் அருளில்
அருள் வரமாக்கினாய்!
அஹ்மதரின் ஆசியில்
வந்த வாழ்வாக்கினாய்!

அழகிய ஹக் திக்ரும்
அஹ்மதரின் ஸலவாத்
துதித்து நாவினில்
நனைவோம்.!

ஆமீன் !!
யா ரப்பே !!
என் ஹுப்பே !!

ஸல்லல்லாஹு அலா
முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்💞

🖋நூர் ஷஃபியா காதிரியா

No comments: