Thursday, November 7, 2019

மலேஷியா நாட்டின் ஒப்பற்ற தலைவர் பிரதமர் துன் டாக்டர் டத்தோ மஹாதிர் முஹம்மது

Hidayathun Nayeem














அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவனே, தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவனே, புகழ் அனைத்தும் நிகரற்ற இறைவன் உனக்கே.

மலேஷியா நாட்டின் ஒப்பற்ற தலைவர் பிரதமர் துன் டாக்டர் டத்தோ மஹாதிர் முஹம்மது (TUN DR. MAHATHIR MOHAMED) அவர்களின் தொலைநோக்கு பார்வையினால்,

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மலேஷியாவின் தலைநக‌ர் கோலாலம்பூரை வணிக தலைநகரமாகவும் (COMMERCIAL capital), புதிய தலைநகர் (OFFICIAL Capital) புத்ரஜெய (PUTRAJAYA) என்ற நகரை வடிவமைத்தார்.


அவருடைய கனவு 2020 ல் தன்னிறைவு மலேஷியா ஆவதே. ஆனால் அவர் அதற்கு முன்பே தானாகவே மனமுவந்து பிரதமர் பதவியை துறந்தார்.(நம் நாட்டில் நடக்குமா?).

இறைவனின் நாட்டபடி 2020ல் அவர் கண்ட கனவு படியே தன்னிறைவு மலேஷியாவில் பிரதமராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி.

யா ரஹ்மானே! இந்த வயதிலும் (90+) அவர் நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபடும் இவருக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுப்பாயாக,

புத்ரஜெயாவில் அனைத்து அரசாங்க ஆட்சியாளர்களின் அலுவலகங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது.

கலைநயமிக்க இறையில்லம் காண்போரை கணவரும் வண்ணம் உள்ளது. பிரதம மந்திரியின் அலுவலகம் பிரம்மாண்டமாக காணப்படுகிறது.

இறைவன் நாடினால் பயணக்காட்சிகள் தொடரும்......


Hidayathun Nayeem

No comments: