Tuesday, November 19, 2019

கற்க...கசடற.

Dr.Vavar F Habibullah
·

திருவள்ளுவர்...!
ஹிந்துவா,கிருத்துவரா,
சமணரா அல்லது பவுத்தரா
என்பது தெரியாது.ஆனால்
அவர், தமிழ் இன மக்களுக்காக
இறைவனால் அனுப்பப்பட்ட,
ஒரு இறைத்தூதராகக் கூட
இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன்.

திருக்குறள் கற்று தந்த எனது
பழைய தமிழ் ஆசிரியர்களை
இன்றும் என்னால்
மறக்க இயலவில்லை.
ஆசிரியர்களுக்கான சகல
தகுதிகளையும்
அவர்கள் பெற்றிருந்தார்கள்
என்பதாலேயே அவர்கள்
இன்றும் நினைவில் நிற்கிறார்கள்.
திருக்குறள் மதத்தை போதிக்கும்
ஒரு புத்தகம் என்று அன்றைய
மாணவர்கள் என்றும் கருதியதில்லை.


அறிவு செறிவும்,கனிவும், பணிவும்
கொண்ட ஆசிரிய,பேராசிரிய
பெருமக்களையே, நான் எனது
பள்ளி,கல்லூரி வாழ்க்கையில்
கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
ஏழை நோயாளிகளுக்கு தனது
இரத்தத்தையே தானமாக
வழங்கி, உயிர் காத்த மருத்துவ
பேராசிரியர்களை கண்டு
வியந்திருக்கிறேன்.ஆனால்...

கல்வியில் கூட ,அதுவும்
தமிழகத்தில் இப்போது
வன்முறை நிகழ்வதும்
அது மாணவ, மாணவிகள்
தற்கொலையில் முடிவதும்
அதிர்ச்சி அளிக்கிறது.

மூளையில் பழைய நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து, புதிய
நரம்புகள் கனெக்சன் பெற
புதிய புற படிப்பு அவசியம்.
அமெரிக்காவில், சற்று
ஓய்வில் இருந்தபடியே
அதிக புத்தகங்களை...
எளிதாக படித்து முடித்து
விட்டேன். என்றாலும்
என்னால் அந்த படிப்பை
ஜீரணிக்க இயலவில்லை.
நல்ல படிப்பு கூட,இப்போது
அபாயம் விளைவிக்குமோ
என்று அஞ்சுகிறேன்.

இந்திய மாணவர்கள்
கல்வியில் சிறந்தவர்கள்
என்றே அமெரிக்கா இன்றும்
நம்புகிறது.பல அமெரிக்க
பல்கலை கழகங்களில் நமதூர்
மாணவர்களை அதிக அளவில்
என்னால் பார்க்க முடிகிறது.
ஆனால் நமதூர் மகா கல்வி
நிலையங்களோ கல்வியின்
பெயரால்,தலை சிறந்த மாணவ
மணிகளை பொறுக்கி எடுத்து,
பாகுபடுத்தி, மனச் சிதைவுக்கு
ஆட்படுத்தி, மரண பீதிக்கு
உட்படுத்தி, தற்கொலை செய்து
கொள்ளும் அளவுக்கு அவர்களை
தூண்டும் நிலைக்கு, கல்வியிலும்
வன்முறையைக் கையாள்கிறது
எனும்போது ஒரு மருத்துவர்
என்ற நிலையில் சாதாரணமான
விசயமாக இதை என்னால் கருத
இயலவில்லை.

பழைய தமிழ் திரைப்படப்
பாடல் ஒன்று என் நினைவில்
வந்து போகிறது.
“வாழை மரம் படிக்கவில்லை
கனி கொடுக்க மறந்ததா!
வான்முகிலும் படிக்கவில்லை
மழை கொடுக்க மறந்ததா!
சோலை எல்லாம் படித்ததில்லை
நிழல் கொடுக்க மறந்ததா!”
பள்ளி சென்று படிக்காமலே
இவை எல்லாம் நெஞ்சில்
பாசத்தோடும்,நேசத்தோடும்
வாழவில்லையா!!
மெத்த படித்த கல்வியாளர்களே
மத துவேசத்தை கல்வியிலும்
புகுத்தினால்....யாரிடம் போய்
முறையிடுவது...!

நேற்று ஒரு அமெரிக்க நண்பரிடம்
பேசிக் கொண்டிருந்த போது
அவர் கூறிய தகவல் எனக்கு
ஆச்சரியமாக இருந்தது.
டாக்டர்..யூ நோ..
மோஸ்ட் ஆஃப் த
நோபல் பிரைஸ் வின்னர்ஸ்
ஆர் மீட் ஈட்டர்ஸ் ஒன்லி..பட்
வித் எ ஸாஃப்ட் மைண்ட்!
ஹிட்லர் இஸ் எ டோடல்
வெஜிடேரியன்...பட்,
வித் எ குரூவல் மைண்ட்!.
Dr.Vavar F Habibullah
·


No comments: