Monday, January 14, 2019

பகுத்தறிய மறவாதே..!!

................................

வஞ்சகம் தனையேயுண்டு
வருத்தித் தலைக் கொய்யும்
நஞ்சையே நற்பாலென நம்பவைத்து....

வெண்ணிறத் தோலணிந்த
விஷம நரிகளுண்டு யிங்கே...

பஞ்செனத் துருத்தியப்
பருத்த மடியது கண்டு
பசுவெனவே யெண்ணி நீயும்
பாலறுந்தத் துணியாதே மறந்தும்
பகுத்தறிய மறவாதே..!!


சகதிகலந்தச்
சாக்கடைக் கழிவுகளை
சாதியப் பாலெனவே யூட்டி
அகதிகளெனப் புறந்தள்ளி
அரசியல் கூத்தாடிப் பிழைக்க

தகுதியில்லாத்
தரங்கெட்டச் சொல்லடுக்கித்
தான் சார்ந்த ......
குலப்பால் தனையே யூட்டி
மதி பிடிங்கிச் செவிமெழுகி
மதத் தாண்டவமாடி பிழைக்க

வகைக்கொன்றாய்
வந்து போகும்......
பகையொன்றையே
தந்து போகும்.......

பனங்காட்டு நரிகளூட்டும்
பாலெதையும் பருகிவிடாதே நீயும்
மனங்கெட்டு அறிவிழந்தே
மாய்ந்து விடாதே..!!

தமிழ் பிரியன் நசீர்

No comments: