Wednesday, January 16, 2019

யார் அழகு ! எது அழகு?


*அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்*
        *அழகாக இருக்க நாம்* *ஆசைப்படுகிறோம்*
        *அழகாக இல்லையெனும் ஒற்றைக் காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்.*
*அழகு என்று நம்மை பிறர் ஏற்காவிடில், மனம் வாடிவிடுகிறோம்.*

         *எது அழகு ?*

*சிவந்த நிறமா?* *கூறான மூக்கா?* *வேல்போன்ற விழிகளா?* *வனப்பான உடல் அமைப்பா?* *வண்ண,வண்ண உடைகளா?*
*வித விதமான சிகை அலங்காரங்களா?* *விலை உயர்வான நகை அலங்காரங்களா?*
          *இவைகளெல்லாம் அழகுதான். ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல.*


         *குழந்தைகளை அன்போடும், பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு!!!*
           *அப்பெற்றோர்களை வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள் அழகு!!!*

            *மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு!!!*

            *கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு!!!*

             *பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு!!!*

              *நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட  பார்வையுடன் கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு!!!*

               *செய்யும் தொழிலை திறமையுடன் செய்பவர்கள் அழகு!!!*

                *தொழிலில் அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப் போற்றுபவர்கள் அழகு!!!*

                 *கையூட்டு வாங்காத கைகளுக்குச் சொந்தக்ககாரர்கள் அழகு.!!!*

                 *பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு!!!*

                 *பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்காரர்கள் அழகு!!!*

                 *சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு!!!*

                 *பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு!!!*
                 *அத்துன்பத்தைக் களைந்திட விரையும் கரங்கள் அழகு!!!*

                 *சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு!!!*

                 *பணிவாக இருக்கும் பண்பாளர்கள் யாவரும் அழகு!!!*

                  *மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு!!!*

           *இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள் ?*

*உணர்ந்து கொள்ளுங்கள்,நீங்கள்தான் உண்மையிலேயே அழகு!!!!*
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

No comments: