Sunday, January 27, 2019

நான் என்ற நினைப்பு


"நான்" என்ற நினைப்பை விட்டு வா
நான் என்று நீ நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் வெறும் பிரமையே.  ஏழை மனிதா தற்பெருமை என்ற புரவியை விட்டு கீழே இறங்கி விடு.  சொற்ப வழுக்கிலேயே  சறுக்கிப்  படுகுழியில் விழுந்து நாசமானவர்கள்   எத்தனையோ பேர்! ஒன்றுமே அறியாமல் இருந்து ஞானப் பலன் பெற்றோர் எத்தனையோ பேர்! அதிகம் படித்திருந்தும் ஞானமற்ற  மௌட்டிக்கறாய்  போனவர் எத்தனையோ பேர்!
உன் அறிவை கேவலம் என்ற துணியால் நீ மறைத்துக் கொண்டிருக்கும் போது ஞான அறிவின் சிறப்பு உனக்கு எப்படி கிடைக்கும்?  நரைத்துப் போன உன் மயிருக்கு கருப்புச் சாயம் பூசிக் கொண்டால் உன் நரையை மறைத்துவிட்டதாக எண்ணாதே!  அதன் வர்ணத்தை மாற்றி இருக்கிறாயேயன்றி நரையய்   நீ போக்கி விடவில்லை!

( ரிபாயீ நாயகம் ரலியல்லாஹு அன்ஹு)

No comments: