Friday, January 11, 2019

உலகம் பிறந்தது உனக்காக

அஸ்ஸலாமு  அலைக்கும்,
புதியதலைமுறை  கல்வி இதழில் நான் எழுதிய உலகம் பிறந்தது உனக்காக என்ற தன்னம்பிக்கை தொடர் தினத்தந்தி பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளிவந்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். வருகின்ற 12-01-2019 அன்று சென்னை நந்தனம் புத்தக கண்காட்சியில் தினத்தந்தி ஸ்டால் எண்.60 மற்றும் 61 யில் மாணவர்கள் மற்றும்  இளைஞர்களுடன் நேரில் கலந்துரையாடி கையொப்பம் இட்டு தர உள்ளேன். இந்த செய்தியை தங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
நூல் பற்றிய விபரம் :
ஆசிரியர்      : பேராசிரியர்.அ.முகமது அப்துல் காதர்
பக்கங்கள்     : 96
விலை          : 75
வெளியிடு    : தினத்தந்தி பதிப்பகம்
அறிமுகம்     : இன்றைய இளைய மாணவர்களுக்கு இருக்கக்கூடிய தன்னம்பிக்கை குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முயற்சி தான் இந்த நூல். தோல்வி கற்று தரும் பாடம் மிக சிறந்த பாடம். அந்த படத்தை நீங்கள் சிறப்பாக கற்று கொண்டால் உங்கள் வாழ்வில் எப்போதும் வெற்றி தான். தோல்வியை ஏற்று கொண்டு தோல்வியின் பாடத்தை கற்றுக்கொண்டு வறுமையிலும் சாதித்தவர்களையும், கற்றல் குறைபாட்டிலும் சாதித்தவர்களையும், மரணத்திற்கு சவால் விட்டு வாழ்க்கையில் சாதித்தவர்களையும் பற்றி எழுதி உள்ளேன். இந்த நூல் இளைஞர்களுக்கு மிகவும் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு,
பேராசிரியர்.முனைவர்.அ.முகமது அப்துல் காதர்
முதல்வர், செண்டு பொறியியல் கல்லூரி,
மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
அலைபேசி : 9445398096, 9444238324
மின்னஞ்சல் : dean@ccet.org.in


From: Dean CCET <dean@ccet.org.in>
from:Muduvai Hidayathmuduvaihidayath@gmail.com

No comments: