Sunday, September 23, 2018

உன்னிடம் இறைஞ்சுகிறேன் யா அல்லாஹ்

இறைவா...
நீ
ஆற்றல்களின் அரசன் !

சேயை
சுமக்க வைத்து
பெண்ணை
தாயாக்கித் தருபவன் !

விதையை புதைக்க வைத்து
மரத்தில்
கனியைத் தருபவன் !


காயத்தைப் படைத்து
அதில்
காயத்தை வைப்பவன் !

நஞ்சுக்குள்ளும்
மருந்தை வைப்பவன் !

கண்ணுக்குள்ளே
ஈரம் வைத்து
சுரக்க வைப்பவன் !
நெஞ்சுக்குள்ளே
பாசம் வைத்து
இரங்க வைப்பவன் !

இரந்தும்
விழி சுரந்தும்
உன்னிடம்
இறைஞ்சுகிறேன்
யா அல்லாஹ் ....
உன்னை ஈமான் கொண்டோர்
உள்ளத்தில்
உறுதி கொடு !
கொடுமதியாளர்
கூட்டத்தை வெல்லும்
சக்தி கொடு !
நல்லோர் வாழ்வுக்கு
வெற்றி கொடு !
உன்னைத் துதிப்போர்க்கும்
தொழுவோர்க்கும்
இறைவா
நீயே கூலி
கொடு !

அருளாளா ...
என் வேண்டுதலுக்கு
அருள் கொடு
அருளே கொடு !

ஆமீன் !

Abu Haashima பேரன் ரஸீன்

No comments: