Saturday, September 22, 2018

*இறைவன் இல்லை*


இறைவன் இல்லை
என்று இயம்புவதும்
மதங்கள் இல்லை
என்று மறுப்பதும்
சாதிகள் இல்லை
என்று சாடுவதும்
அவற்றை
இல்லை என்று
அழித்தெறிவதற்காக
அல்ல

மூடநம்பிக்கைகள் கூடாது
என்று முழங்குவதற்காக
காட்டுமிராண்டித்தனம் ஆகாது
என்று கர்ஜிப்பதற்காக
வன்முறை கேடு
என்று வலியுறுத்துவதற்காக
தீண்டாமை தவறு
என்று தடுப்பதற்காக
மட்டுமே



அறமற்ற
கூடாதுகளைச்
செய்யாதிருக்கும் ஆத்திகர்களும்
அவற்றை
அடையாளங் காட்டும்
நாத்திகர்களும்
உயர்ந்தவர்கள்தாம்

வேரையே
அறுக்கச் சொல்லிக்
கதறுவது
விளைவதெல்லாம்
விசமாக இருப்பதால்
மட்டும்தான்

அன்புடன் புகாரி
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

lஅன்புடன் புகாரி

No comments: