Tuesday, October 17, 2017

கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்துகொண்டே வந்திருக்கிறோம். வருகிறோம்.

இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்துகொண்டே வந்திருக்கிறோம். வருகிறோம்.
குறிப்பாக சமீபகாலமாக வெகு வேகமாக இழந்திருக்கிறோம்
முப்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்றைய வாழ்வை ஒப்பிட்டால் தலை சுற்றுகிறது

உண்ணும் உணவு பொய் உடுத்தும் உடை பொய் காணும் காட்சி பொய் கேட்கும் குரல் பொய் ஆளும் ஆட்சி பொய் என்று எங்கும் எதிலும் பொய்மை நிரம்பி வழிகிறது
அன்றெல்லாம் ஒரு பத்திரிகையில் செய்தி ஒன்று வருகிறது என்றால் நாம் அதை அப்படியே நம்புவோம். இன்று நம்பமுடிவதில்லை
வீடியோக்கள் எல்லாம் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. எல்லோரும் கைதேர்ந்த பொய்யர்களாய் ஆகிவிட்டார்கள்.
மனிதன் பாதி எந்திரம் பாதி என்று ஒரு ஸ்மார்ட்போன் இல்லாதவன் மனிதனாகவே இல்லை இன்று
மனதும் மூளையும் கையடக்க ஸ்மார்ட்போனில் இருக்கிறது மனிதனிடம் இல்லை
நான் என்ன சிந்திக்க வேண்டும் நீ என்ன சிந்திக்க வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. நாம் எல்லோரும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளாய் ஆனோம்
நாளை?
நீயும் எந்திரம்
நானும் எந்திரம்
நினைத்துப் பார்த்தால்
எல்லாம் எந்திரம்

அன்புடன் புகாரி

No comments: