Thursday, October 12, 2017

நதிகளில் கலந்த .....

நதிகளில் கலந்த 
மனிதகழிவுகளை உட்கொண்ட 
சமுத்திரத்தின் துவர்ப்பு
மேககூட்டங்களின் உயர்ந்து 
தூய்மை பெற்று மீண்டும் 
பரிசுத்தமாக பூமிபந்தில் விழுகிறது.
மனிதா
ஏதாவது ஒரு நதிக்குள் செல் 
அது சமுத்திரத்தை அடைந்துக்கொள்ளும்.
துளிகளில் உள்ள கழிவுகளை 
தூய்மை செய்ய
ஆகாயத்து அழைப்பு 
கரம் விரித்து காத்திருக்கிறது.
ஆகா மழை பரிசுத்தமானது 
அதன் துளிகள் அர்ரஹீமின் அன்பை சொல்கிறது.
- வழிப்போக்கன்


புழுக்களை சுமக்கும் 
கொக்கியின் மீது
அசாத்திய நம்பிக்கை 
தூண்டிக்காரனுக்கு.
மானிடா ...
பூமி 
ஆகாயத்தில் மிதக்கிறது.
அதன் அச்சு வட்டம் 
ரஹ்மானிடமிருக்கிறது.
- வழிப்போக்கன்

No comments: