Sunday, October 29, 2017

நிலையற்ற மனிதன் ....!*


தான் என்றென்றும்
பெருமையின் சிகரத்தில் அமர்ந்து
களைப்பேதும் எய்திடாமல்
அங்ஙனமே இருக்கப்போவதாக
எண்ணுபவர்கள் மற்றுள்ளோரை
சகமனிதரென்றும் பாராமல்
சிறுமையின் ஆழத்தில் ஆழ்த்தி
மனவழுத்தத்தின் உச்சத்திலேற்றி

திக்குமுக்காட வைத்து
உயிர்போகும் தருணத்தின்
சற்றுமுன்னே விடுவித்து
மேலும் பல கட்டளைகள்
பிறப்பித்து
இறப்பை தள்ளிவைத்துவிட்டதாக
கொண்டிருக்கும் மமதையில்
இவ்வுலகில் இறுமாந்து இருப்போரை
ஏகன் இறையோனும்
அறிந்தே இருக்கிறான் !

ராஜா வாவுபிள்ளை

No comments: