Monday, October 30, 2017

நிலையற்ற வாழிவின் நிறைவு ....!*

காலையில் கண்விழித்தால்
மட்டுமே தெரியும்
உடலின் உயிர் பிடிப்பு
முழுப்பகலும் உழைத்தால்
மட்டுமே தெரியும்
முன்னேற்றத்தின் முதல் படி
சம்பாத்தியத்தில் சேமித்தால்
மட்டுமே தெரியும்

எதிர்காலத்தின் பிரகாச ஒளி
முழுமனதுடன் தர்மம்செய்தால்
மட்டுமே தெரியும்
செல்வச் செழிப்பின் அருமை
பொருள்விளங்க கற்றால்
மட்டுமே தெரியும்
செருக்கற்ற கல்வியின் திறன்
சொல்வதை செய்தால்
மட்டுமே தெரியும்
உலக வாழ்வின் வரம்
தன்னிலை விளக்கமறிந்தால்
மட்டுமே தெரியும்
மாற்றார் மனதின் ஆழம்
இயற்கையுடன் ஒன்றினால்
மட்டுமே தெரியும்
இறைவனது படைப்பின் அழகு
விட்டுக் கொடுத்தால்
மட்டுமே தெரியும்
ஓங்கும் ஒற்றுமையின் உணர்வு
இறைதியானத்தில் ஆழ்ந்தால்
மட்டுமே தெரியும்
நிலையற்ற வாழிவின் நிறைவு

ராஜா வாவுபிள்ளை

No comments: