Tuesday, October 31, 2017

எழுது

எழுது
எழுத்து ஒரு தவம்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு யுகம்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு வானம்
நீ எழுது



எழுது
எழுத்து ஒரு சூரியன்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு சொத்து
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு பண்பாடு
நீ  எழுது

எழுது
எழுத்து ஒரு பரிணாமம்
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு ஆட்சி
நீ எழுது

எழுது
எழுத்து ஒரு எழுச்சி
நீ எழுத்து

எழுது
எழுத்து ஒரு புரட்சி
நீ எழுது

எழுது
எழுத்துக்குமுன்
இயலாததென்று
எதுவுமில்லை
நீ எழுது

நீ எழுதியதை நேசிக்க
பலகோடி உயிர்கள் உண்டு
நீ எழுது

நீ எழுதியதை
நஞ்சு நெஞ்சோடு கீற
ஒன்றிரண்டு
தேள்களும் உண்டு
ஆனபோதிலும்
நீ எழுது

கொடுந் தேள்களால்
மட்டுமே
ஆனதல்ல எழுத்துலகம்
நீ எழுது

தேடித்தேடி
வாசித்து வாசித்து
நேசித்து நேசித்து
உருகிப் பல்கிப்பெருகும்
நேச நெஞ்சக்
கடல்களால் ஆனதே
எழுத்துலகம்
நீ எழுது


அன்புடன் புகாரி
https://anbudanbuhari.blogspot.in/2017/10/blog-post_30.html

No comments: