Wednesday, October 4, 2017

கைகள் வேட்டிக்குள்ளேயே வந்துவிட்டன

கைகள்
வேட்டிக்குள்ளேயே
வந்துவிட்டன
தமிழன் இன்னும்
விழித்துக்கொள்வதாய்
இல்லை
அவன்
ஒரு சோம்பேறி மயக்கத்தில்
சுருண்டு கிடக்கிறான்
மானம் பறிபோகிறது
என்ன செய்ய முடியும் என்கிறான்

மரியாதை பறிபோகிறது
மாற்றமுடியுமா என்கிறான்
வீட்டுக்கூரை பிரிக்கப்படுகிறது
காற்றாய் இருக்கும் என்று
சமாதானம் கொள்கிறான்
அவனின்
அத்தனை நிறங்களும்
கழுவப்படுகின்றன
குளிப்பதாக நினைத்துக்கொள்கிறான்
ஒற்றை அடையாளமும்
மீதமின்றி தீய்க்கப்படுகிறது
தான் யார் என்று தெரியாமல்
சோதிடனிடம் நிற்கிறான்
முகவரி
முற்றாகக் கிழிக்கப்படுகிறது
நடுவீதியில் நிற்கிறான்
சேரனையும் காணவில்லை
சோழனையும் காணவில்லை
பாண்டியனையும் காணவில்லை
பனியன் சட்டையில்
ஒரு பரதேசி மட்டுமே தெரிகிறான்
பெரியாரும் வரவில்லை
அண்ணாவும் வரவில்லை
வந்தாலும்
இவன் கண்ணுக்குத்
தெரியவுமில்லை
முகமற்றவன்
முகநூலில்
லைக் போட்டுக்கொண்டிருக்கிறான்
’தமிழ் வாழ்க’
எங்கோ கேட்டதுபோலிருக்கிறதே
என்று
தெருமுனை
பான் பராக் கடையில்
ஏ கியா ஹை என்று
விசாரிக்கிறான்
மறத்தமிழன்
அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி

No comments: