Tuesday, October 31, 2017

மௌனம்

மௌனம்
சிறந்த மொழி


மௌனம்
பேரறிவின் அடையாளம்


மௌனம்
உயிரின் காப்பகம்


மௌனம்
உணர்வுகளின் நங்கூரம்


மௌனம்
மன்னிப்பின் ஆலயம்


மௌனம்
வானத்தின் நீலம்


மௌனம்
கடலின் ஆழம்


மௌனம்
கருந்துளையின் ரகசியம்




ஆனால்

சில

நச்சு மௌனத்தின்பின்

கொடிய ஆபத்து வலைகள்

அவசர அவசரமாய்ப்

பின்னப்பட்டுக்கொண்டிருக்கின்றன

என்பதே

மௌனத்திற்கான

ஒரே ஒரு துயரச் சாபம்


-அன்புடன் புகாரி
https://anbudanbuhari.blogspot.in/2017/10/blog-post_2.html

No comments: