Saturday, September 2, 2017

ஒவ்வொன்றிற்கு பின்னும் ....!

ஒவ்வொரு தெளிவுக்குப் பின்னும்
ஒரு தேடல் இருந்தது
ஒவ்வொரு பகைக்குப் பின்னும்
ஒரு வஞ்சினம் இருந்தது

ஒவ்வொரு நட்புக்குப் பின்னும்
ஒரு புரிதல் இருந்தது
ஒவ்வொரு திறமைக்குப் பின்னும்
ஒரு உந்துதல் இருந்தது



ஒவ்வொரு வலிக்குப்  பின்னும்
ஒரு துரோகம் இருந்தது
ஒவ்வொரு மௌனத்திற்கு பின்னும்
ஒரு சிந்தனை இருந்தது

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும்
ஒரு உழைப்பு இருந்தது
ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும்
ஒரு அறியாமை இருந்தது

ஒவ்வொரு நாட்டுக்குப் பின்னும்
ஒரு சரித்திரம் இருந்தது
ஒவ்வொரு அரசியல்வாதிக்குப் பின்னும்
ஒரு கும்பல் இருந்தது

ஒவ்வொரு செயலுக்குப் பின்னும்
ஒரு திட்டம் இருந்தது
ஒவ்வொரு காரியத்திற்கு பின்னும்
ஒரு காரணம் இருந்தது

ஒவ்வொரு பொய்யுக்குப் பின்னும்
ஒரு தீமை இருந்தது
ஒவ்வொரு உண்மைக்குப் பின்னும்
ஒரு உறுதி இருந்தது

ஒவ்வொரு எழுச்சிக்குப் பின்னும்
ஒரு புரட்ச்சி இருந்தது
ஒவ்வொரு விடியலுக்குப் பின்னும்
ஒரு அஸ்த்தமனம் இருந்தது

ஒவ்வொரு தேடலின் பின்னும்
ஒரு தேவை இருந்தது
ஒவ்வொரு வளர்சியின் பின்னும்
ஒரு முயற்சி இருந்தது

ஒவ்வொரு பிறப்பின் பின்னும்
ஒரு இறப்பு இருந்தது
ஒவ்வொரு முடிவின் பின்னும்
ஒரு தொடக்கம் இருந்தது

ஒவ்வொரு வெற்றிபெற்ற
ஆணினிற்கு பின்னும்
ஒரு பெண் இருக்கிறாள்.

* ராஜா வாவுபிள்ளை

No comments: