Saturday, September 16, 2017

கருணைதான் மனித குலத்தின் ஒற்றைத் தேவை


கருணைதான்
மனித குலத்தின் 
ஒற்றைத் தேவை

கருணைதான்
மனிதர்களின் 
ஒற்றை அடையாளம்

கருணைதான்
உயிர் காக்கும் 
ஒற்றைக் கவசம்


கருணைதான்
ஐம்புலன்களின்
ஒற்றை மகுடம்

கருணைதான்
உறவின் நட்பின் 
ஒற்றை அடிப்படை

கருணைதான்
வாழ்க்கைக்கான 
ஒற்றை ஆதாரம்

சாதுர்யமாகச் செயல்படுவதுதான்
சாதனை என்று நினைக்கிறார்கள்
இல்லை
கருணையோடு செயல்படுவதுதான்
மானுடம் காக்கும் அறிவுடைமை

கருணைதான் 
இறைவன்

கருணைதான்
இதயத்தில்
இறைவன் வசிப்பதற்கான
அத்தாட்சி


அன்புடன் புகாரி
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

No comments: