Saturday, September 23, 2017

தேடல் ....! (பாகம் - 3 )

எதிர்பார்ப்பின் தேடலில்
என்னையே தொலைத்தேன்
முடிவிலும்  எஞ்சியிருந்தது
நம்பிக்கையென கண்டேன்

சத்தியத்தின் தேடலில்
காலத்தை விரயம்செய்தேன்
உள்ளத்தின் தூய்மையில்
சாத்தியமென கண்டேன்



ஆளுமையின் தேடலில்
அரசியலை ஆராய்ந்தேன்
குற்றவாளிகள் நிறைந்த
சாக்கடையென கண்டேன்

அழகுக்கலைகளின் தேடலில்
ஆடலுடன் பாடலை ரசித்தேன்
வீண்விரயம் செய்தபின்னே
இயற்கை எழிலில் கண்டேன்

புண்ணியத்தின் தேடலில்
புத்திசாலி என்றெண்ணினேன்
பொறாமையை ஒழித்தபின்
பொறுமையில் கண்டேன்

ஆரோக்கியத்தின் தேடலில்
மருந்துகளை வேண்டினேன்
பசித்தபின் புசிப்பதில்
நோயின்மையை கண்டேன்

நியாயத்தின் தேடலில்
நிம்மதியை தொலைத்தேன்
உலகெங்கும் அநியாயகாரர்களே
ஆட்சிசெய்யக்
கண்டேன்

ராஜா வாவுபிள்ளை

No comments: